சேலத்தில் அதிர்ச்சி.. 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை.. இரு காமுகர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை இந்தக் கொடுமைக்கு ஆளானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எவ்வளவு முயன்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

சேலத்தில் அதிர்ச்சி
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டியை இளைஞர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு யாரும் ஆதரவற்ற நிலையில் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் அப்பகுதியில் சிறுசிறு கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். மேலும் ரேசன் கடையில் வழங்கப்பட்டும் அரிசி வாங்கி தனியே உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

80 வயது மூதாட்டி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரது விவசாய நிலத்தில் அந்த மூதாட்டி களை பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த நங்கவள்ளியைச் சேர்ந்த 22 வயதான விக்னேஷ் 19 வயதான சீனிவாசன் ஆகியோர் வயலுக்கு அருகே அமர்ந்து மதுகுடித்துள்ளனர். போதை ஏறிய நிலையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை வயதானவர் என்றும் பாராமல் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

இளைஞர்கள் கைது
தலைக்கேறிய மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரது செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . மூதாட்டி அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது
இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி நிலையில் குடி போதையில் தகாத செயலில் ஈடுபட்ட விக்னேஷ், சீனிவாசன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரைத்தார். இதை ஏற்று விக்னேஷ் சீனிவாசன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். இதையடுத்து கிளை சிறையில் இருந்த இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications