பல நாள் வேட்டையாடிய 2 பேர்.. இன்னோவா காரில் வலம் வந்த போது மாறுவேடத்தில் பிடித்தது போலீஸ்
சேலம் அருகே மான் இறைச்சி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சேலம்: வெறும் 2 பேர்தான்.. வேட்டையாடப்பட்டதோ 500-க்கும் மேல்.. அதனால்தான் மாறுவேடத்தில் போலீசார் சென்று இவர்களை அள்ளி கொண்டு வந்து சிறையிலும் அடைத்துவிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. ஆனால் சில சமூகவிரோதிகள் மான் வேட்டையில் அதிகமாக ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக கடந்த ஒரு வருஷமாகவே 500க்கும் மேற்பட்ட மான்கள் வேட்டையாடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

அதனால் இதனை தடுக்க சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் தங்கதுரை, தனது நேரடி பார்வையில் 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்தார். இந்த குழுவினர் வேட்டையாடப்படும் மான்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை அறிந்து, அங்கு மாறு வேடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இன்னோவா காரில் வந்த கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 14 பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் ஒரு ஒரு கிலோ மான் கறி சுற்றப்பட்டு இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த லோகநாதன், லட்சுமணன் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்களது நண்பர்களுக்கு இறைச்சியை விற்பனை செய்ய செல்வதாக கூறினர். இதையடுத்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications