மோடிக்கு யார் அடிமை என்பதில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே போட்டி! வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி
சேலம்: மோடிக்கு அடிமையாக இருப்பதில் யார் நம்பர் 1 என்பதில் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் மோடி தான் எஜமானர் என அவர் கூறியிருக்கிறார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

சேலம் பயணம்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதனிடையே திமுக இளைஞரணி நிர்வாகி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தாம் மணமக்களுக்கு அறிவுரை கூறப்போவதில்லை என்றும் கூறினாலும் அதனை மணமக்கள் கேட்கப் போவதில்லை எனவும் கூறி கலாய்த்தார்.

ஓ.பி.எஸ். -இ.பி.எஸ்.
மணமக்கள் இருவருமே படித்தவர்கள், மருத்துவர்களாக இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தன்மானத்தோடு வாழ வேண்டும் எனக் கூறினார். கலைஞரும் தமிழும் போல வாழ வேண்டும், ஸ்டாலினும் உழைப்பும் போல வாழ வேண்டும் என நிறைய பேர் சொல்வார்கள் என்றும் ஆனால் தன்னை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போல் மட்டும் மணமக்கள் வாழக் கூடாது எனக் கூறினார். அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறி சட்டசபை நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.

யார் அடிமை?
இதனால் திருமண விழா மேடையில் சிரிப்பலை எழுந்தது. இதனிடையே பிரதமர் மோடிக்கு அடிமையாக இருப்பதில் யார் நம்பர் 1 என்பதில் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி நிலவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருக்குமே டெல்லியில் உள்ள பிரதமர் மோடி தான் எஜமானர் என வெளுத்து வாங்கினார். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை என்ன கொடுத்தாலும் சரி என்று தலையாட்டிக் கொண்டு இருந்தவர்கள் அவர்கள் இருவரும் எனப் பேசினார்.

பேப்பர் இல்லை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசிய போது எந்த குறிப்பையும் பார்க்காமல் மனதில் தோன்றியதை 5 நிமிடம் பேசிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications