பாஜக அலுவலகம் சென்றது ஏன்.. பியூஸ் மானுஸ் பரபரப்பு பேட்டி .. 7 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது
Recommended Video
சேலம்: தன் குடும்பத்தினர் குறித்து சிலர் அருவருக்கத்தக்க பதிவுகளை பேஸ்புக்கில் வெளியிட்டதாகவும் அதை கேட்கவே தான் பாஜக அலுவலகம் சென்றதாகவும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் கூறியுள்ளார்.
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்றார். பேஸ்புக்கில் நேரலை செய்தபடி, அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்ன என்று கேட்டார்.
இதனால் பாஜக நிர்வாகிகள் மற்றும் பியூஸ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக நிர்வாகிகள் சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். செருப்பு மாலையுடன் காணப்பட்ட பியூஸ் மானுஷை போலீசார் வந்து மீட்டு சென்றனர்.

பியூஸ் மீது வழக்கு
தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் பியூஸ் மானுஸ் மீது போலீசில் சேலம் பாஜக மாவட்ட தலைவர் கோபிநாத் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் பியூஸ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், தாக்குதல், கொலை மிரட்டல், அரசை அவதூறாக பேசுதல், கூட்டு சதி செய்தல், கெட்ட வார்த்தை பேசுதல் உள்பட 7 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பியூஸ் போலீசில் புகார்
இதேபோல் பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் பேரிலும் அஸ்தம்பட்டி போலீசார் பாஜகவினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடும்பத்தினர் குறித்து அவதூறாக பதிவு
இந்நிலையில் பாஜக அலுவலகத்திற்குள் சென்றது ஏன் என்பது குறித்து பியூஸ் மானுஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை விமர்சித்து வருகிறேன். ஆனால் அந்த கட்சியினர் என்னை எவ்வளவு அவதூறாக பேசினாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் என் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி அவதூறாக அவருவருக்கத்தக்க வகையில் பதிவிடுகிறார்கள். இது குறித்து போலீசில் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை.

அடித்து விட்டார்கள்
இதனால் மன உளைச்சல் அடைந்த நான் விளக்கம் கேட்வும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து விசாரிக்கவும் சென்றேன். ஆனால் அங்கிருந்த 10 பேர் எனக்கு செருப்பு மாலை அணிவித்து கொடூரமாக தாக்கினர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்
-
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications