"போன்ல யாரு".. நடுராத்திரி சிரித்து சிரித்து பேசிய மனைவி.. அதிர்ந்த கணவன்.. கத்தியால் ஒரே குத்து
கணவனை கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டார்
சேலம்: கணவனை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ளது மசையன் தெரு காட்டூர் பகுதி... இங்கு வசித்து வருபவர் பாலமுருகன்.. 32 வயதாகிறது.. இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி.
இவரது மனைவி இலக்கியா.. 26 வயதாகிறது.. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.. காலேஜுக்கு தினமும் பஸ்ஸில் சென்று வரும்போது, அப்போது அந்த தனியார் பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்த பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு அதுவே காதலாக மாறியுள்ளது .

தகராறு
இவர்களின் காதலை இரு வீட்டிலுமே ஏற்று கொள்ளவில்லை.. அதனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2020-ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்... இப்போது 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.. ஆனால், திருமணம் ஆனதில் இருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்துவிட்டார்.. குழந்தையை தூக்கி கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்...

புகார்
அத்துடன் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக மகளிர் போலீசிலும் புகார் தந்தார்.. இந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்... ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் பாலமுருகன் வெளியே வந்தார். இதனிடையே, 2 நாளைக்கு முன்பு நாம் மறுபடியும் ஒன்றாக வாழலாம், வழக்கையும் வாபஸ் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி குழந்தையுடன் இலக்கியா வந்துள்ளார்..

சிரிப்பு
பாலமுருகனும் மனைவி சொன்னதை ஏற்றுக் கொண்டார்.. இந்நிலையில் நேற்று முன்தினம் நடுராத்திரி இலக்கியா செல்போனில் யாரிடமோ ரொம்ப நேரமாக சிரித்து பேசி கொண்டிருந்திருக்கிறார்.. இதனால் பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய் என்று கண்டித்துள்ளார். இதனால் மறுபடியும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த இலக்கியா, கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து பாலமுருகனின் மார்பில் குத்திவிட்டார்..

கைது
இதில் வலி பொறுக்க முடியாமல் பாலமுருகன் அலறியுள்ளார்...அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த பாலமுருகனை மீட்டு எடப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அவரது நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக போலீசார் இலக்கியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications