'ஒருபுறம் சோகம்,மறுபுறம் ஹாப்பி..' சொந்த நாடு வெளியேறினாலும்.. கணவரின் ஆட்டத்தை கண்டு ரசித்த சானியா!
ஷார்ஜா: உலக கோப்பையில் நேற்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியை புரட்டி எடுத்த பாகிஸ்தான், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயப் மாலிக்கை அவரது மனைவி சானியா மிர்சா நேரில் உற்சாகப்படுத்தினர்.
டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையின் சூப்பர் 12 போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்தியாவால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி போட்டியில் நபிபியாவை இந்தியா எதிர்கொள்கிறது

பாகிஸ்தான் அணி
இந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரும் ஷாக் தந்த அணி என்றால் அது பாகிஸ்தான் தான். யாருமே பாகிஸ்தான் இந்தளவுக்கு வலுவாக இருப்பார்கள் என நினைக்கவில்லை. பாபர் அசாமின் சூப்பரான கேப்டன்சியில் அந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தது. க்ரூப் 2இல் ஒரு தோல்வியைக் கூடப் பெறாமல் முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான். உலகக் கோப்பையில் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது பாகிஸ்தான்.

சூப்பர் தொடக்கம்
அதில் முதலில் பேட் செய்த இந்தியா பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பந்த் தவிர வேறு யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் பேட் செய்த பாகிஸ்தானுக்கு மிகச் சிறப்பான தொடக்க விக்கெட் பார்டன்ஷிப் கிடைத்தது. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.

அடுத்தடுத்து வெற்றி
அதைத் தொடர்ந்து 2ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. அதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. பாக். அணியின் ஹரிஸ் ரவூப் அட்டகாசமாகப் பந்து வீசி 4 விக்கெட்களை சாய்த்தார். அதன் பிறகு பேட் செய்த பாகிஸ்தான், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ரன்களை குவித்தது. அடுத்து ஆப்கனை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், நபியா அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஸ்காட்லாந்து போட்டி
இந்தச் சூழலில் ஸ்காட்லாந்து அணியைப் பாகிஸ்தான் நேற்று எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல பாபர் அசாம் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மறுமுனையில் ஹபீஸ் தவிர மற்ற வீரர்கள் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ஹபீஸும் 15ஆவது ஓவரில் வெளியேறிய நிலையில் அவருக்குப் பின் ஷோயப் மாலிக் களமிறங்கினார்.

அதிரடி காட்டிய ஷோயப் மாலிக்
முதல் பந்தில் இருந்தே தனது அதிரடியைத் தொடங்கிய ஷோயப் மாலிக், ஸ்காட்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். அவரது அதிரடியால் பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. தொடர்ச்சியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட மாலிக் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 1 பவுண்டரியும் 6 சிக்சர்களும் அடக்கம். அடுத்துக் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியால் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராகப் பெரியளவில் ரன்களை எடுக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 54 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சானியா மிர்சா
இந்த போட்டியை ஷோயப் மாலிக்கின் மனைவியும் இந்தியாவின் முக்கிய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா நேரில் கண்டுகளித்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயப் மாலிக்கை அவர் உற்சாகப்படுத்தினர். இது தொடர்பான படங்களை ட்விட்டரில், பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் இந்திய அணி தோற்ற போதிலும் கணவரை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சானியா மிர்சா கலந்து கொண்டுள்ளது பாராட்டும் வகையில் உள்ளதாகப் பதிவிட்டு வருகின்றனர்,

அடுத்த போட்டி
பாகிஸ்தான் அணி க்ரூப் 2இல் ஒரு தோல்வியைக் கூடப் பெறாமல் முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுள்ளது. பாகிஸ்தான் அணி தனது அடுத்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வரும் நவ.11ஆம் தேதி எதிர்கொள்கிறது.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications