Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் அடிக்க தொடங்கிய கொரோனா.. மெல்ல அதிகரிக்கும் உயிரிழப்பு.. அலறும் இரு முக்கிய ஆசிய நகரங்கள்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பு முடிந்து, நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இப்போது சில காலம் மட்டுமே ஆகிறது. இதற்கிடையே ஆசியாவின் இரு முக்கிய நகரங்களான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இப்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2019ல் பரவிய கொரோனா உலகெங்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீராகவே பல ஆண்டுகள் ஆனது. அலை அலையாகத் தாக்கிய கொரோனா, ஒவ்வொரு சமயத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வேக்சின் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தினார்கள்.

COVID-19 Surge Hits Hong Kong Singapore as New Wave Spreads Across Asia

கொரோனா பரவல்

இதற்கிடையே ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில், அங்கு வாழும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக ஹாங்காங்கில் கொரோனாவின் செயல்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளதாக நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்தார். ஹாங்காங்கில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அங்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா உயிரிழப்புகள்

பலருக்கும் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சில உயிரிழப்புகளும் கொரோனாவால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை கடந்த காலங்களில் ஏற்பட்ட அளவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் சமீப காலங்களில் இதுவே உச்சமாகும். இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அதேபோல சிங்கப்பூரிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. மே மாதம் முதல் வாரம் வைரஸ் பாதிப்பு சுமார் 28% அதிகரித்து 14,200ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் 30% அதிகரித்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் சிங்கப்பூர் நிர்வாகம் தினசரி பாதிப்பு குறித்த தகவல்களைப் பகிர்ந்து வருகிறது.

என்ன காரணம்

பொதுமக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம்.. அதேநேரம் கொரோனா உச்சத்தில் இருந்த போது பரவிய வேரியம்டுகளை போல அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வேரியண்ட்கள் பரவுவது போல எதுவும் தெரியவில்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசியாவின் இரண்டு பெரிய நகரங்களில் கடந்த சில காலமாக கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஒரு அலையை அது ஏற்படுத்துமோ.. மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் பொதுமக்கள், குறிப்பாக இணை நோய் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்போர் பூஸ்டர் டோஸ் வேக்சினை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வருகிறது.

கோடையில் பரவும் கொரோனா

பொதுவாக எந்தவொரு சுவாச தொற்றாக இருந்தாலும் அது குளிர் காலங்களிலேயே பரவும். ஆனால், கொரோனா சம்மரில் தான் அதிகம் பரவுகிறது. இப்போது சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவும் நிலையில், கடந்தாண்டு கூட கோடைக் காலத்தில் சீனாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இப்போது பரவும் கொரோனா அலைகள் வலிமையானதாக இருக்காது. மேலும், பெரும்பாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. இவை சில வாரங்களில் அப்படியே மறைந்துவிடும். இருப்பினும், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்ற சூழலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+