140 கோடி இந்தியர்களின் டேட்டா + சிங்கப்பூர் தொழில்நுட்பம்! சுகாதாரத் துறையில் வெடிக்கும் புரட்சி!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தற்போது AI தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள AI மாடல்களைப் பயிற்சி கொடுக்க 140 கோடி இந்தியர்களின் டேட்டாக்களை பயன்படுத்த இந்தியா-சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவின் விரிவான சுகாதாரத் தரவுகளும், சிங்கப்பூரின் மேம்பட்ட செயற்கை AI திறன்களும் இணைந்து, சுகாதாரத் துறையில் புதுமைகளை வேகப்படுத்தவும், தொழில்நுட்பங்களை மேலும் மலிவாக்கவும், உலகளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தத் தகவலை, AWS நிறுவனத்தின் ஆசியப் பிரிவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் மற்றும் தலைவர் கரேன் பிரியதர்ஷினி கூறியிருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ANI-க்கு பேட்டியளித்த பிரியதர்ஷினி, "சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும், AI மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறது. AI மாடல்களுக்கு பயிற்சி தரவுகள் தேவைப்படுகிறது. இந்தியா இதற்கு உதவ முடியும். இந்தியாவின் பெரும் மக்கள் தொகை தரவுகள் AI வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்யும்.
AI வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
இந்தியாவில் 140 கோடி மக்கள் இருப்பதால், பெரும் தரவுத் தளம் உள்ளது. இது மற்ற எந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவின் தனித்துவமான தரவுச் செல்வம் உலகளாவிய AI மேம்பாட்டுக்கு உதவும்.
அரிய நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கூட்டணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவின் பெருகிவரும் சுகாதாரத் தரவுகளை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுக்க முடியும். நம்மிடம் ஏராளமான தரவுகள் இருக்கப்போகின்றன. அவற்றைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஆராய்ச்சியாளர்களை வரவேற்போம்.
AI மற்றும் பாதுகாப்பு
செயற்கை நுண்ணறிவு ஒரு தொழில்நுட்பத்தில் அமெரிக்காவோ, சீனாவோ முன்னிலையில் இருக்கின்றன என்பது கிடையாது. இந்தியாவின் மக்கள் தொகை காரணமாக இங்கு அற்புதமான ஸ்டார்ட்அப்கள் உருவாகியுள்ளன. மலேசியா, இந்தோனேசியா, தைவான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் சக்திவாய்ந்த AI தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. நாம் டேட்டாவை கொடுக்கிறோம். பதிலுக்கு நம்முடைய AI ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அந்த நாடுகள் உதவ உள்ளன" என்று கூறியுள்ளார்.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
grok ஏஐ பெண்களை பிகினியில் காட்டவில்லை என்ற உடன் புதிய ரூட்டை கையில் எடுத்த 'சில்லறைகள்'












Click it and Unblock the Notifications