ஷாக்கிங்கா இருக்கே! 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் MH370 விபத்து ஆகலயாம்! எக்ஸ்பர்ட் திடுக் தகவல்
சிங்கப்பூர்: மலேசியா விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டும் மர்மான முறையில் மாயமாகி விபத்தில் சிக்கியது. இந்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது..எந்த இடத்தில் சிக்கியது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ள நிலையில், விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை என்றும் விமானியின் கொலை திட்டமே காரணம் என்று பிரிட்டனை சேர்ந்த எக்ஸ்பர்ட் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து MH 370 என்ற விமானம் 239 பயணிகளுடன் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. பெய்ஜிங்கிற்கு நள்ளிரவு புறப்பட்ட இந்த விமானம் நடு வழியில் திடீரென மாயமானது. தென் சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென தனது பாதையில் இருந்து விலகி சென்றது செயற்கை கோள் தரவுகளில் தெரியவந்தது.

எனினும், அதன் பிறகு விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால், கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகியும், விமானத்திற்கு என்ன ஆனது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டாலும் விமானத்தின் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானியின் சதி திட்டமே காரணமா?: இந்திய பெருங்கடலில் பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. எனினும், விமானம் விபத்தில் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், விமானம் எப்படி விபத்தில் சிக்கியது.. எங்கே சிக்கியது என்ற விவரம் தெரியவில்லை. விமானத்தை பற்றிய பல்வேறு தகவல்களும் அவ்வப்போது கிளம்பி வருகின்றன.
இன்னமும் விமானத்தில் சென்ற 239 பயணிகளின் உறவினர்கள் ரனமான நெஞ்சத்துடன் தங்களது நாட்களை நகர்த்தி வருகின்றனர். எனினும், என்றாவது ஒரு நாள் எம்.எச் 370 விமானத்துக்கு என்ன ஆனது? எங்கு விழுந்தது? போன்ற விவரங்கள் தங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். இதனிடையே, விமானம் விபத்தில் சிக்கியதற்கு விமானியின் சதிதிட்டமே காரணமாக இருக்கும் என்று பிரிட்டனை சேர்ந்த விமான நிபுணர் ஒருவர் சைமன் ஹார்டி கூறியுள்ளார்.
239 பேரும் கடலுக்கு அடியில்: இது தொடர்பாக ஹார்டி கூறியதாவது:- எம். ஹெச் விமானத்தின் விமானி ஜஹாரி அஹ்மத் ஷா விமானத்தில் பயணிக்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். விமானத்தை மிக கவனமாக கடலுக்குள் செலுத்தியுள்ளார். இதனால், விமானத்தில் சென்ற 239 பேரும் கடலுக்கு அடியில் சென்று மரணத்தை அடைந்தனர். ஷாவின் தனிப்பட்ட பிரச்சினை அவரது மனநலனை பாதித்து இருக்கலாம்.
அதன் காரணமாகவே இந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது" என்று கூறியுள்ளார். இதற்கிடையே விமானியின் குடும்பத்தினர் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர். மாயமான விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி வந்தாலும் இதுவரை விபத்திற்கான காரணமோ.. விமானம் எங்கு விழுந்து விபத்துக்குள்ளானது என்பதோ கண்டறிய முடியவில்லை. இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை 2017 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications