Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1965களில் ஆறுகள் உட்பட ஒன்றுமே இல்லாத சிங்கப்பூர்.. இன்று ஆசியாவின் மிகப்பெரிய வெற்றிச் சரித்திரம்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு நம்ம ஊர் ஆட்கள் பலர் வேலைக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். அங்கு நல்ல சம்பளம், நல்ல உள்கட்டமைப்பு, அற்புதமான வாழ்க்கை தரம் என எல்லாமே வல்லரசு நாடு போல் இருக்கிறது. ஆனால் உண்மையில் சிங்கப்பூர் பல உலக நாடுகளை போல் எல்லா வளங்களும் உள்ள பூமி இல்லை. எந்த வளமும் இல்லாத கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போன்ற தீவு பகுதி.. ஆறுகள் இல்லை.. ஏன் எதுவே இல்லை.. ஆனால் லீ குவான் யூ என்ற தனி மனிதனால் இன்று ஆசியாவின் மிகப்பெரிய வெற்றிச் சரித்திரமாக இருக்கிறது. எப்படி என்பதை பார்ப்போம்.

இன்றைக்கு அரசியல் வாதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு தான் திட்டம் போடுவார்கள். ஆனால் சிங்கப்பூரின் அதிபராக இருந்த லீ குவான் யூ தன் நாடு 50 வருடங்கள் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை 1965களிலேயே திட்டமிட்டார். சிங்கப்பூரில் இன்று நடந்த மாற்றம் , லீ குவான் யூ என்ற தனிநபரின் அசைக்க முடியாத தொலைக்கு நோக்கு பார்வை தான். அதேபோல் சிங்கப்பூரில் நடந்தது வெறும் வளர்ச்சி திட்டங்கள் அல்ல.. அது ஒரு என்ஜினியரிங்..உலகத்திற்கே பாடமாக வேண்டிய தலை சிறந்த என்ஜினியரிங்.. அந்த வடிமைப்பை இன்னொரு நாடு கற்பனை கூட செய்திருக்காது. அப்படி ஒரு என்ஜினியரிங் பணி.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Singapore which had nothing including rivers in 1965 is today Asia s greatest success story

1965ல் வெளியேறியது

1965இல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது. அப்போது சிங்கப்பூருக்கு என்று ஒரு ராணுவம் இல்லை. வளங்கள் இல்லை. குடிக்க குடிநீர் கூட இல்லை. வறுமையில் தவித்த 20 லட்சம் மக்கள் கொண்ட ஒரு சிறிய தீவு ஆகும். ஆனால் அப்படி ஒரு சூழலில்இருந்த சிங்கப்பூர் ஒரு மனிதரின் அசைக்க முடியாத தொலைநோக்குப் பார்வை மற்றும் அதை ஆசியாவின் மிகப் பெரிய வெற்றிச் சரித்திரமாக மாற்றி உள்ளது.

எப்படி நடந்தது

சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அங்கு 85% மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தனர். நாட்டில் 70% பேர் வேலையில்லாமல் இருந்தனர். இனவாத வன்முறை எல்லா இடங்களிலும் தலைவிரித்தாடியது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் தீவு முற்றிலும் சிதைந்துவிடும் என்று பல உலக நாட்டு வல்லுநர்கள் கூறினார்கள். மலேசியா கூட லீ குவான் யூ தங்களைத் தேடி மீண்டும் வருவார் என்று நினைத்து கொண்டிருந்தது.

நம்பிக்கையூட்டினார்

ஆனால், லீ குவான் யூ- தனது கைவசம் வேறு திட்டங்களை வைத்திருந்தார். "நாம் பிழைத்துக்கொள்வோம். நாம் வளர்வோம்" என்று நம்பிக்கையூட்டினார். அவர் நினைத்தது போலவே அந்த மாற்றம் தொடங்கியது... லீ ஒரு நாட்டை உருவாக்கவில்லை. ஒரு அமைப்பை உருவாக்கினார்.

ஊழலை ஒழித்தார்

10 ஆண்டுகளுக்குள் அவர், சிங்கப்பூரில் ஊழலை வேரோடு அகற்றினார். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பதவி அளிக்கும் கொள்கையை அமல்படுத்தினார். கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒழுங்கை நிலைநாட்டினார். தெருக்களை சுத்தமாக வைத்திருக்க சுயிங்கத் கூட தடை செய்தார். தன் கட்டுப்பாடுகளில் இருந்து அவர் ஒரு போதும் பின்வாங்கவில்லை. மேற்கு நாடுகளைப் பற்றிப் படித்தார். ஜப்பானின் உற்பத்தித் திறமை மாதிரியைப் பின்பற்றினார். பின்னர் சிங்கப்பூரை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான நுழைவாயிலாக மாற்றினார்.

சிங்கப்பூர் உள்நாட்டு உற்பத்தி

ஆம், துபாய் எப்படி மேற்கு பக்கம் உலகின் சர்வதேச விமான நிலையம், கப்பல் தளமாக இருக்கிறதோ, அதுபோல் கிழக்கு மேற்கை இணைக்கும் மையப்புள்ளியாக சிங்கப்பூர் விமான நிலையம்இருக்கிறது. கப்பல் போக்குவரத்தும் இருக்கிறது. சிங்கப்பூரில் பெரு நிறுவனங்கள் தங்கள் தளங்களை அமைத்தன. தொழிற்சாலைகள் நிதி மையங்களாக உருவெடுத்தன. 1960இல் சிங்கப்பூரின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $428 ஆக இருந்தது. இன்று: $82,000க்கும் மேல் ஆகும். இது உலகின் பணக்கார நாடுகளான ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவை விட அதிகம். இதை அடைய சிங்கப்பூருக்கு பல நூற்றாண்டுகள் ஆகவில்லை. வெறும் ஒரே தலைமுறையில் இது நடந்தது.

ஒழுக்கம் தான் முதன்மை

இதன் பின்னால் இருந்த திட்டம் கடுமையானது... ஆனால் அது பலன் அளித்தது. ஊழலா? உடனடியாக பணிநீக்கம் தான். போராட்டங்களா? அப்படியே ஒடுக்கப்பட்டது. போதை மருந்தா? மரண தண்டனை தான். சிங்கப்பூரில் சுதந்திரம் இரண்டாம் இடத்தில்தான் இருந்தது. ஒழுக்கம் தான் முதல் இடத்தில்தான் இருந்தது. சிங்கப்பூர் இப்படி வளர ஒழுக்கம் தான் முதன்மையான காரணம் ஆகும்.

Singapore which had nothing including rivers in 1965 is today Asia s greatest success story

லீ குவான் யூ யின் நம்பிக்கை

ஆனால் இதனை எல்லாம் செய்த சிங்கப்பூரின் அன்றைய அதிபர் லீ குவான் யூ பிரபலமாக இல்லை... மாறாக அவர் அந்த மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார். லீ கடுமையான சமரசங்களைச் செய்யத் தயாராக இருந்தார். மக்களிடம் கைதட்டல்களைத் தவிர்த்துவிட்டு, நம்பிக்கையை உருவாக்கினார். அந்த நம்பிக்கையே சிங்கப்பூரின் மிகச் சிறந்த ஏற்றுமதிப் பொருளாக மாறியிருக்கிறது.

சிங்கப்பூரில் ஊழலை எப்படி ஒழித்தார்

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் அரசு ஊழியர்களாக சிங்கப்பூர் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஏன்? லஞ்சத்தை ஒழிக்கத்தான். அது பெரிய அளவில் பலன் அளித்தது. இன்று, சிங்கப்பூர் உலகிலேயே மிகக் குறைந்த ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏன்.. ஊழலே இல்லாத நாடு என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நாடு முக்கியமா, தனிநபர் செல்வாக்கு முக்கியமான, தன் குடும்பம் முக்கியமா என்று வரும் போது, நாடு தான் முக்கியம் என்று அங்கு உள்ள அரசியல் தலைவர்கள் பார்க்கிறார்கள். லீயின் கொள்கையை அப்படியே கடைபிடிக்கிறார்கள். அதுவே அங்கு ஊழல் இல்லாத நிலைக்கு காரணம் ஆகும்.

உலகின் பல்வேறு நாடுகள் 5 ஆண்டு திட்டங்களை வகுத்தபோது... லீ 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டார். வீட்டுவசதி, கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம் என எல்லா துறையிலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார். ஒரு ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தை நடத்துவது போல சிங்கப்பூரை நடத்தினார். அலட்டல் இல்லை. சாக்குப்போக்குகள் இல்லை. திட்டத்தைச் செயல்படுத்தும் திறன் மட்டுமே. 1990இல் அவர் பதவியை விட்டு விலகினார்.

திரைக்குப் பின்னால் வழிகாட்டினார்

ஆனால் மறைந்துவிடவில்லை. திரைக்குப் பின்னால் இருந்து எதிர்காலத் தலைவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டினார். அவர் கட்டமைத்த அமைப்பு ஒருபோதும் சிதையாமல் இருக்க உறுதி செய்தார். 25 ஆண்டுகளில் சிங்கப்பூரின் மாற்றம் (1965 → 1990) பற்றி பார்ப்போம். வேலையின்மை: 14% → 3%க்கும் குறைவு. உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்று. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP): $500 → $11,000. குடிசைப் பகுதிகளில் இருந்து 80% மக்கள் பொது வீடுகளில் வசித்தனர். சுத்தமான தெருக்கள். பாதுகாப்பான சுற்றுப்புறங்கள். இது ஒரு அற்புதம் அல்ல. இது ஒரு வடிவமைப்பு. அதாவது சரியான சோஷியல் என்ஜினியரிங் என்று சொல்லலாம்.

பாதுகாப்பான நாடு

2015இல் லீ மறைந்தபோது, சிங்கப்பூர் ஆசியாவின் மிகச் சுத்தமான நாடு என்ற பெருமையுடன் தொடர்ந்தது. இன்று உலகளாவிய வணிக மையமாக இருக்கிறது. உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருக்கிறது பல நாடுகளின் அரசுகளை விடச் சிறப்பாகச் செயல்படும் ஒரு விமான நிலையமாக சிங்கப்பூர் இருககிறது.

லீயின் மரபு தான் சிங்கப்பூரின் அடையாளம்

இன்று லீயின் மரபு சிங்கப்பூரின் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சட்டத்திலும் வாழ்கிறது. சிங்கப்பூரின் இந்த வளங்கள் தற்செயலானது அல்ல. அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு மனிதனால் வடிவமைக்கப்பட்டது. லீயின் கதை வெறும் வரலாறு மட்டுமல்ல. அது ஒரு செயல்முறை வழிகாட்டியாகும். அவர் செல்வத்திற்கு முன் நம்பிக்கையை உருவாக்கினார். அதுவே சிங்கப்பூரை அசைக்க முடியாததாக மாற்றியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+