Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணே நவமணியே உன்னை.. இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு தாலாட்டு பாடி கண்கலங்கிய தாய்..!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற அன்னையர் தினத்தில் மகளின் கட்அவுட்டிற்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாயை உறவினர்கள், பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

உலகில் தாய்ப்பாசத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை. அதிலும் பெண் குழந்தைகள் என்றாலே தாய்க்கு மிகவும் பிரியமானவராகத்தான் இருப்பார். பெண் குழந்தை பிறந்து திருமணம் முடிந்து சென்றால் கூட தாய்க்கு அவர் குழந்தை தான்..

A mother held a puberty ceremony for her daughter who died in Sivagangai

அப்படி ஒரு நெகிழ்ச்சி தரும் தாய்ப்பாச நிகழ்வை தான் தற்போது பார்த்திருக்கிறது சிவகங்கை. திருப்புவனத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன் & ராக்கு தம்பதியினருக்கு பாண்டிச்செல்வி என்ற ஒரே ஒரு பெண்குழந்தை தான், வேறு குழந்தைகள் இல்லை.

சிவகங்கை சிறுமி: சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு அலங்காரம் என்றாலே மிகவும் இஷ்டம், பள்ளி சென்று வந்த பின் பெரிய பெண் போன்று சேலை கட்டி பூ வைத்து வலம் வருவது வழக்கம், உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அங்கும் மிகுந்த அலங்காரத்துடன் வலம் வந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போது தாய் ராக்குவிடம் தான் பூப்பெய்தும் போது இது போன்று பிரம்மாண்டமாக விசேஷம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

திடீர் மரணம்: ஒரே பெண் என்பதால் அவர் சொல்வதற்கு எல்லாம் ஆமோதித்துள்ளார். பிறந்த நாள் உள்ளிட்ட தினங்களில் விசேஷங்களை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் போது திடீரென உடல்நலக்குறைவால் பாண்டிச்செல்வி உயிரிழந்துள்ளார்., ஒரே மகள் மரணமடைந்ததை ஜீரணிக்க முடியாமல் இருந்த ராக்கு தனது மகள் தன்னுடனேயே வாழ்ந்து வருவதாக எண்ணி வலம் வருகிறார்.

இறந்த மகளுக்கு நிகழ்ச்சி: தற்போது அவரது மகளுக்கு 14 வயது ஆகும் என்றும் உயிருடன் இருந்தால் பூப்பெய்து இருப்பார் என எண்ணி அவருக்கு பூப்புனித (சடங்கு) நீராட்டு விழா அன்னையர் தினத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார். உறவினர்கள் அனைவரையும் அழைத்து அன்னையர் தினத்தில் கொண்டாட எண்ணிய போது திருமண மகால் கிடைக்காததால் நேற்று மகளின் பூப்புனித நீராட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினார். உறவினர்கள் அனைவரையும் பத்திரிக்கை வைத்து அழைத்து தனியார் கல்யாண மண்டபத்தில் மகளை போன்றே கட்அவுட் செய்து அதற்கு பட்டுச்சேலை, நகை, மாலை அணிவித்து விழாவை நடத்தினார்.

சீர்வரிசை: மகளின் காலடியில் அவர் பயன்படுத்திய கொலுசு உள்ளிட்டவைகளும் உறவினர்கள் கொண்டு வந்த பட்டுச்சேலை, நகை சீர் வரிசை உள்ளிட்டவைகளும் பரப்பி வைக்கப்பட்டன. விசேசங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்று மகளின் அலங்கரிக்கப்பட்ட கட்அவுட் உடன் சேர்ந்து உறவினர்கள், ராக்கு, அவரது கணவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டோ எடுத்து கொண்டனர்.

உறவினர்கள் நெகிழ்ச்சி: ராக்குவிற்கும் அவரது மகள் பாண்டிச்செல்விக்கும் "என் பொம்முகுட்டி அம்மாவிற்கு" என்ற திரைப்படத்தில் நடிகை சுஹாசினி மகளை பறிகொடுத்த பின் பாடும் "கண்ணே நவமணியே உன்னை காணாது நெஞ்சு" என்ற பாடல் ரொம்ப பிடிக்குமாம், அடிக்கடி தாயும் மகளும் அந்த பாடலை பாடுவது வழக்கம், தினசரி இரவிலும் அந்த பாடலை பாடிய பின்தான் பாண்டிச்செல்வி தூங்குவாராம், துரதிஷ்டவசமாக அந்த பாடல் அவரது வாழ்க்கையில் உண்மையாகி போனதுதான் சோகம், பூப்புனித விழாவில் தாயார் ராக்கு அந்த பாடலை பாடியது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+