Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித்குமார் மரணம்! கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகை

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் குடும்பத்தினரும் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலுக்குப் பெண் பக்தர் சிவகாமி, அவரது மகள் நிகிதா ஆகியோர் வந்திருந்தனர். சிவகாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைக் கண்ட அஜித்குமார், வீல் சேர் கொடுத்து உதவியுள்ளார்.

ajithkumar thiruppuvanam

அப்போது நிகிதா, அஜித்குமாரிடம் காரை ஓரமாக நிறுத்திவிடுமாறு கேட்டார். அதற்கு அஜித்தோ, தனக்குக் கார் ஓட்டத் தெரியாது, வேறு யாரையாவது வைத்துப் பார்க்கிங் செய்யச் சொல்லுங்கள் எனக் கூறினாராம்.

இதையடுத்து, சிவகாமியும், நிகிதாவும் சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் காரை எடுத்தபோது, கார் சீட்டின் பின்னால் வைத்திருந்த 9 பவுன் நகையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நிகிதா, நகை மாயம் குறித்துத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவரை போலீஸார் அடித்ததால்தான் இறந்தார் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ajithkumar thiruppuvanam

மேலும், அஜித்குமாரின் உடம்பில் 18 இடங்களில் காயம் இருந்ததாகப் பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், லாக் அப்பில் இளைஞர் மரணத்தை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றமும், "இறந்த நபர் என்ன தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட நபரை கடுமையாகத் தாக்கியது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 பேரும் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், காவலர்கள் சங்கரபாண்டியன், ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துத் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+