அஜித்குமார் மரணம்! கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் குடும்பத்தினரும் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலுக்குப் பெண் பக்தர் சிவகாமி, அவரது மகள் நிகிதா ஆகியோர் வந்திருந்தனர். சிவகாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைக் கண்ட அஜித்குமார், வீல் சேர் கொடுத்து உதவியுள்ளார்.

அப்போது நிகிதா, அஜித்குமாரிடம் காரை ஓரமாக நிறுத்திவிடுமாறு கேட்டார். அதற்கு அஜித்தோ, தனக்குக் கார் ஓட்டத் தெரியாது, வேறு யாரையாவது வைத்துப் பார்க்கிங் செய்யச் சொல்லுங்கள் எனக் கூறினாராம்.
இதையடுத்து, சிவகாமியும், நிகிதாவும் சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் காரை எடுத்தபோது, கார் சீட்டின் பின்னால் வைத்திருந்த 9 பவுன் நகையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நிகிதா, நகை மாயம் குறித்துத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவரை போலீஸார் அடித்ததால்தான் இறந்தார் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், அஜித்குமாரின் உடம்பில் 18 இடங்களில் காயம் இருந்ததாகப் பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், லாக் அப்பில் இளைஞர் மரணத்தை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றமும், "இறந்த நபர் என்ன தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட நபரை கடுமையாகத் தாக்கியது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 பேரும் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், காவலர்கள் சங்கரபாண்டியன், ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துத் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications