ஜோடி போட்டு பார்த்துவிடலாம்! ஒரே வார்டில் கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் கணவனும் மனைவியும் ஒரே வார்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சை வேட்பாளர்களாக களைமிறங்கியுள்ள இவர்கள், வாக்கு சேகரிப்பின் போது ஒன்றாக ஓட்டுக் கேட்டுச் செல்கின்றனர்.
இதனால் யாருக்கு வாக்களிப்பது எனப் புரியாமல் அந்த தம்பதியின் உறவினர்களும், நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

நகர்ப்புற தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களின் வித விதமான வாக்குறுதிகளால் வாக்காளர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக பணபலம், ஆட்பலத்துடன் பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் கணவனும் மனைவியும் சுயேச்சையாக ஒரே வார்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

11-வது வார்டு
காரைக்குடி நகராட்சி 11-வது வார்டை சேர்ந்த மெய்யர் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் அதே வார்டில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார் அவரது மனைவி சாந்தி. ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டாலும் இரண்டு பேரும் ஒன்றாக சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வை பார்க்கும் அரசியல் கட்சியினர் இது என்னடா சோதனை என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்பி வருகின்றனர்.

உறவினர்கள்
11-வது வார்டில் மெய்யருக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்ததா இல்லை அவரது மனைவி சாந்திக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்ததா என்பது வாக்கு எண்ணிக்கையின் போதே தெரியவரும். இவர்களை போலவே பெரம்பலூர் நகராட்சியிலும் கணவன் மனைவி தம்பதி ஒருவர் ஒரே வார்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர்
காரைக்குடி நகராட்சி 11-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் மோதுகிறார். காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் நகர்மன்ற தலைவர் பதவியை காங்கிரஸ் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications