தமிழகத்தை உலுக்கிய கச்சநத்தம் மூவர் படுகொலை.. 27 குற்றவாளிக்கான தண்டனை அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 2018ல் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 27 பேரின் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே கச்சநத்தம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஆவாரங்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2018 மே மாதம் 28 ம் தேதி கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா நடந்தது. அப்போது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஒருகும்பல் புகுந்து வெட்டியது. இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் இறந்தனர். இந்த மூவர் படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக பழையனூர் போலீசார் வழக்குப்பதிந்து 33 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்தது. குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்தன. இதையடுத்து ஆகஸ்ட் ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 27 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தண்டனை விபரங்கள் இனு்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இதனால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 27 பேருக்கும் வழக்கு தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications