கப்பலேறிய சில்மிஷ தாத்தாவின் மானம்.. 70 வயசுல அதுவும் கோயிலுக்குள்.. இப்ப 178 வருஷம் ஜெயிலுதான்
சிவகங்கை: சிவகங்கையின் ஆன்மீக தலத்தில் தஞ்சம் புகுந்த பிஞ்சுயிர்களை சிதைத்த முதியவர் ஒருவருக்கு, மரணம் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் 178 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது... என்ன நடந்தது? யாரிந்த சில்மிஷ தாத்தா?
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி.. 70 வயதான இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் தேதி கோயிலுக்கு வந்த 9 வயது சிறுமி, 10 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் இந்த தாத்தா பெரியசாமி வழிமறித்துள்ளார்..
சிவகங்கை தாத்தா
தெய்வ சந்நிதி என்றும் பாராமல் அந்த 3 குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார்.. மேலும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்..
குழந்தைகள் நலக்குழுவினரும் இதில் தலையிட்டு புகார் அளித்தனர்.. அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பூசாரி பெரியசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.. விசாரணையின் போது பூசாரி என்ற மதிப்பிற்குரிய இடத்தில் இருந்து கொண்டு குழந்தைகளை மிரட்டி காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
கோயில் பூசாரி
இதனையடுத்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தண்டனைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சிறுவர்களை காயப்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 4 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.. மேலும் குழந்தைகளை மிரட்டியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 60 ஆண்டு சிறை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது..
மற்றொரு பாலியல் குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் முக்கியமாக கோயில் பூசாரி என்ற பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு 3 குழந்தைகளுக்கும் இழைத்த கொடுமைக்காக 90 ஆண்டு சிறை மற்றும் 3000 ரூபாய் அபராதம் எனத் தனித்தனியாக தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.
178 வருடம் ஜெயில் தண்டனை
ஆக, ஒட்டுமொத்தமாகப் பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.. 70 வயதான இந்த முதியவர் தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை முழுமையாகச் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது..
குற்றவாளிக்குத் தண்டனை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு தரப்பில் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கோகுல்முருகன் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.. இதில் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்காக இந்த 178 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications