மனுஷங்களாயா நீங்க? முட்டி போட வைத்து.. மாட்டை அடிக்குற மாதிரி! அஜித்குமாரை தாக்கிய அதிர்ச்சி வீடியோ!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண்ணின் நகை காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணையில் தாக்கப்பட்ட அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் குமாரை கோவிலுக்கு பின்னே இருந்த கட்டிடத்தில் வைத்து கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மனப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறார். மாற்றுத்திறனாளி ஆன அவருக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலியை அதே கோவிலில் பாதுகாவலராக பணிபுரியும் அஜித் குமார் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருக்கின்றனர். இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அஜித்குமாரின் சகோதரர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அஜித்குமாரின் மரணத்திற்கு போலீசார் தான் காரணம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கடும் சித்திரவதைக்கு ஆளான அடையாளங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மண்டை ஓடு, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் காயங்கள் உட்புற உறுப்புகளில் காயம், ரத்தக்கசிவு ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. மேலும் கழுத்து பகுதியில் ஏற்பட்ட அழுத்தத்தால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட அறிக்கையை வெளியாகி இருக்கும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அஜித்குமாரை கொடுமையாக தாக்கும் காணொளி !#JusticeForAjithkumar pic.twitter.com/D0sqKFGfZt
— Duraimurugan (@Saattaidurai) July 1, 2025
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கும் நிலையில் போலீசார் எப்படி பொதுமக்களை தாக்கலாம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்குமார் தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோவிலுக்கு அருகே இருந்த கட்டிடத்தில் அஜித்குமாரை முட்டி போட வைத்து பைப் போன்ற ஒரு பொருளால் காவலர் ஒருவர் மாறி மாறி தாக்குவதும் முட்டி போட்டு அமர்ந்திருக்கும் நிலையில் தான் நகையை எடுக்கவில்லை என அஜித்குமார் கூறும் ஆடியோவும் அந்த வீடியோவில் இருக்கிறது.
இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் காவல்துறையினர் என்றால் என்னவெல்லாம் செய்யலாமா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். மேலும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது. விசாரணையின் போது தப்பி சென்ற அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது போலீசார் அஜித்குமாரை தாக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் காவல்துறையின் தாக்குதல் காரணமாகவே அஜித்குமார் உயிரிழந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications