சிவகங்கை அருகே சிலிர்ப்பு.. செல்ல மகன் சொன்னதை அப்படியே "காதுல" போட்டுக்கிட்ட அப்பா.. செம காதணி விழா
சிவகங்கை: சிவகங்கையில் சேகரின் 10 வயது மகனுக்கு காது குத்து விழா நடந்துள்ளது.. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த காதணி விழாவில், ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் திரண்டு வந்து சிறப்பித்தனர். இந்த விழாவின் போட்டோக்கள் இணையத்தில் ஏன் வைரலாகி கொண்டிருக்கிறது தெரியுமா?
காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு கட்டாய சடங்காகும்... ஆனால், இதில் ஏராளமான மருத்துவ உண்மைகள் அடங்கியிருக்கின்றன..

குறிப்பாக, பார்வை திறனை மேம்படுத்தக்கூடிய 2 முக்கிய புள்ளிகள், இந்த காது குத்தும் பகுதியில்தான் உள்ளன. காது பகுதியில் துளையிட்டு காதணி போடும்போது, அதிலிருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு, குழந்தைகளின் உட்புற திறந்து, காது கேட்கும் திறன் மேம்படும்...
காது குத்தலின் ஆரோக்கியம்
காதுகளில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள், நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா, மூச்சு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. காது குத்தும் இடத்தில் இருக்கும் மர்மப் புள்ளி, ஆண் மற்றும் பெண் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.. பெண் குழந்தைகளுக்கு காது குத்துவதால், அவர்கள் வயதிற்கு வந்தபின், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் என்கிறார்கள்..
இவ்வளவு நன்மைகளை தரக்கூடியதால்தான், காதணி விழாவை நம்முடைய முன்னோர்கள் கட்டாய சடங்காக கொண்டுவந்துள்ளனர்.. இந்த விழாவில், குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது... இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.
தடபுடலாக நடந்த காதணி விழா
தென்மாவட்டங்களில் இந்த காது குத்து விழா என்றாலே கோலாகலமாக கொண்டாடப்படும்.. குலதெய்வ கோயிலுக்கு அழைத்து சென்று மொட்டை போட்டு, குளிப்பாட்டி, தாய்மாமன் கொண்டு வரும் புத்தாடைகளை அணிவித்து மகிழ்வார்கள்..
குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து காது குத்துவார்கள்.. உடனே தங்கக் காதணிகளை குழந்தைக்கு போடுவார். அத்துடன் ஏராளமான சீர்வரிசையையும், தங்களது குட்டி மருமகளுக்கு செய்வார்கள். ஒருவேளை தாய்மாமன் இல்லாவிட்டால், அதற்கு நிகரான உறவை வைத்து இந்த காது குத்தல் விழாவை கொண்டாடுவார்கள்.
வியந்து நின்ற உறவினர்கள்
ஆனால், சிவகங்கையில் நடந்துள்ள ஒரு காதணி விழா, பலருக்கும் வியப்பை தந்துள்ளது.. சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் - செல்வராணி தம்பதியினர்.. இவர்களது மகன் விஸ்வநாதனுக்கு 10 வயதாகிறது. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், மகன் விஸ்வநாதனுக்கு காதணி விழா நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.. இதற்காகவே சேகர், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று முன்தினம் சிவகங்கை தனியார் மண்டபத்தில் காதணி விழா தடபுடலாக நடைபெற்றது. இதில், சேகர் - செல்வராணியின் குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் பங்கேற்றிருந்தனர்.
அடம் பிடித்த விஸ்வநாதன்
விழா நடந்து கொண்டிருந்தபோது, "அப்பாவுக்கும் என்னைப் போலவே காது குத்த வேண்டும்" என்று விஸ்வநாதன் அடம்பிடிக்க ஆரம்பித்துவிடவும், இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் திகைத்தனர்.. விஸ்வநாதனை எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை..
இறுதியில், மகனின் பாச வேண்டுகோளை நிறைவேற்ற முடிவு செய்தார் சேகர்.. இதற்காக அதே மேடையில் மகனுக்காக காது குத்திக் கொண்டார்.. அத்துடன் தங்கத்தோடும் அணிந்து கொண்டார்... ஏற்கனவே சேகருக்கு சிறுவயதிலேயே காது குத்திவிட்டார்களாம். ஆனாலும் மகனின் ஆசைக்காக 2வது முறையாக காது குத்திக் கொண்ட சம்பவம் சிவகங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications