ஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை
காட்டுக்குள் பள்ளி ஆசிரியை தற்கொலை குறித்த விசாரணை தீவிரமாகி வருகிறது
சிவகங்கை: காட்டுக்குள் புவனேஸ்வரி டீச்சர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது குறித்து விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.. முதலில் கையை அறுத்து கொண்டுள்ளார்.. அதற்கு பிறகுதான் தூக்கில் தொங்கினாராம்.. சிவகங்கையில் இந்த சம்பவம் இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியபடியே உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.. இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி புவனேஸ்வரி.

அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. இதை தவிர, பரதநாட்டியம் என்றால் இவருக்கு சிறு வயதில் இருந்தே அளவு கடந்த விருப்பம் என்பதால், தனியாக ஒரு டான்ஸ் பள்ளியையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தார்.. அதில், ''இனி நான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை'' என்று தெரிவித்திருந்தார்.. டீச்சரின் இந்த ஸ்டேட்டஸை நடன பள்ளி மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.. இதையடுத்து, உடனடியாக புவனேஸ்வரியின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன காண்டீபன் புவனேஸ்வரியின் செல்போனுக்கு உடனே தொடர்பு கொண்டார்.. ரிங் போனது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த காண்டீபன், உடனடியாக போலீசுக்கு புகார் சொல்லவும், போலீசார் டீச்சரின் செல்போன் நம்பரை டிராக் செய்தனர்.
காரைக்குகுடி - திருச்சி நெடுஞ்சாலையில் சிக்னல் காட்டியது.. அதனால் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கும்போதுதான், காட்டுப்பகுதி ஒன்றில் ஸ்கூட்டி நின்றிருந்ததை கண்டனர்.. பிறகு ஒரு மரத்தில் புவனேஸ்வரி பிணமாக தூக்கு போட்டு கொண்டதையும் கண்டறிந்தனர்.. இதையடுத்து, சடலத்தை மீட்டு விசாரணையும் ஆரம்பமானது.
புவனேஸ்வரி தற்கொலைக்கு பலவாறாக முயன்றது தற்போது தெரியவந்துள்ளது.. முதலில் சுகர் மாத்திரைகளை நிறைய சாப்பிட்டுள்ளார்.. ஆனால், அதில் அவர் சாகவில்லை.. அதனால், கை நரம்பை அறுத்து கொண்டுள்ளார்.. கைகள் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியதே தவிர, அதிலும் அவர் சாகவில்லை.. இதற்கு பிறகுதான், கடைசியாக தூக்கில் தொங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பிறகு அவரது டைரி ஒன்று சிக்கியது.. அதில், வாட்ஸ்அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைத்தாரோ, அதையேதான் அதிலும் எழுதி வைத்திருந்தார்.
இப்போது வரை டீச்சர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தம்பதி 2 பேருமே நல்ல வேலையில், அரசு வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வரும்போது, அவர்களுக்குள் ஏதாவது தகராறா? என்பது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications