சிவகங்கையை பாலைவனமாக மாற விடமாட்டோம்… கவிஞர் சினேகன் பிரச்சாரம்
சிவகங்கை: பாலைவனமாக மாறி வரும் சிவகங்கையில் விவசாயத்தை மீட்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கவிஞர் சினேகன் வாக்குறுதி அளித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கவிஞர் சினேகன், கவிஞர் கண்ணதாசனின் சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றும் 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றத்தை நாங்கள் தருவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒன்றிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது சோலை வனமாக இருந்த செழிமை, கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாக மாறி போய் இருக்கிறது. இப்படியே போனால், இன்னொரு பத்து வருடம் கழித்து பாலைவனமாக மாறிவிடும் என்ற ஒரு மிகப் பெரிய பயம் இருக்கிறது.
மிகச்சிறந்த தொழிற்சாலைகள் இங்கு உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாயத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மக்கள், சொந்த மண்ணை விட்டு வெளியேறி, வேறு இடங்களில் வாழும் ஒரு நிலைமை வரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது மக்கள் நீதி மய்யம் எனவும் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications