Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதறுதா திமுக? அதிமுகவை அழைத்த திருமா! உதயநிதியின் முதல் ரியாக்ஷன் இதுதான்! பரபரக்கும் தமிழக அரசியல்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் திமுக கூட்டணி முறிகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுகவை அழைத்த திருமாவளவன் விவகாரம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதல் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

அக்டோபர் 2.. காந்தி ஜெயந்தி தினமான அன்று திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை கள்ளக்குறிச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

udhyanidhi stalin thirumavalavan dmk

இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என்று பொதுவாக அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதுவிலக்கு கொண்டு வரும் விஷயத்தில் தமிழகத்தில் தயக்கம் உள்ளது. அதிமுகவும், திமுகவும் இதில் தயக்கம் காட்டுகிறது. தயக்கம் உள்ளவர்கள் அனைவரும் மாநாட்டுக்கு வரலாம். அதிமுக கூட வந்து பங்கேற்கலாம். அதிமுக கூட வரலாம். அனைத்து கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது தேர்தலுக்கானது அல்ல. இதனை தேர்தலுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்'' என கூறியுள்ளார்.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. தற்போது விசிக நடத்தும் இந்த மாநாடு என்பது மதுவிலக்கை கொண்டு வரும் வகையில் ஆளும் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும். இந்நிலையில் தான் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்து இருப்பது பெரும் விவாதமாக மாறி உள்ளது. அதேபோது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

இந்நிலையில் தான் சிவகங்கையில் இன்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. எந்தெந்த திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது? எந்தெந்த திட்டங்கள் சீக்கிரமாக முடிக்க வேண்டும்? சுணக்கம் ஏதாவது இருக்கிறதா? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. பல அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது'' என்றார்.

இந்த வேளையில், ‛‛விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும்படி அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே'' என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛அது அவங்க இஷ்டம்ங்க.. பங்கேற்பது அவங்க இஷ்டம்.. அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்'' என கூறிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+