சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்
Recommended Video

சிவகாசி: சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள், இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இனிமேல், அதிக புகை மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளைதான், உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும், தீபாவளி நாளில் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதுகுறித்து இன்று பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன. இதனால் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) வேலை வாய்ப்பை இழப்பார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. பட்டாசு தயாரிப்பில் பசுமை பட்டாசு என்ற ஒன்று கிடையாது. அதிலும் சிவகாசியின் தட்பவெட்ப நிலைக்கு இந்த விதிமுறை சரிப்பட்டு வராது.
டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். உச்சநீதிமன்ற விதிமுறைகள் அடிப்படையில், சிவகாசியில் பட்டாசு தயாரிக்க முடியாது என்பதே யதார்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications