இதுதான் சரியான நேரம்.. மாட்டிக்கொண்ட பென் ஸ்டோக்ஸ்.. கேப்டனை அடித்து தூக்கிய இங்கிலாந்து அணி!
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மாபெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்களுக்கான விதிமுறைகளை மீறி லண்டன் நைட் கிளப் சென்று அங்கு ஏற்பட்ட மோதலில் சிக்கியதே இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கான முதன்மைக் காரணமாகும். இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் இடைக்கால கேப்டனாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, திங்கட்கிழமை அதிகாலையில் இந்த சர்ச்சை அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நள்ளிரவு கட்டுப்பாட்டை மீறி, ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோர் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றுள்ளனர்.
அங்கு ரக்பி வீரர் டோட்டோவா அவ்வா என்பவருடன் ஏற்பட்ட மோதலில், இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து தையல் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணை நிலுவையில் உள்ளதால், ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் இருவரையும் இங்கிலாந்து வாரியம் அணியில் இருந்து நீக்கியுள்ளது. அணியின் துணைக் கேப்டனாக ஹாரி புரூக் இருந்தபோதிலும், அவரும் கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியவர் என்பதால், அனுபவ வீரரான ஜோ ரூட்டிடம் கேப்டன் பொறுப்பு தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2022ல் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோ ரூட், 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியை வழிநடத்த உள்ளார். இந்த நைட் கிளப் விவகாரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தே தற்காலிகமாக விலகவோ ஆலோசித்து வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூன் 17 அன்று ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோருக்கு பதிலாக ஆர்ச்சர் மற்றும் ஜோர்டன் காக்ஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications