நேற்று டிஎஸ்கே, ஜேஎஸ்கே.. இன்று சிஎஸ்கே! 3 அணிகளுக்காகவும் விளையாடும் அகீல் ஹொசைன்.. யார் இவர்?
அபுதாபி: ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகீல் ஹொசைன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. இவர் ஏற்கனவே எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்காகவும், எம்எல்சி லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். இதன் மூலமாக பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் அனலிஸ்ட் ஏஆர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் முடிவாகவே பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் ( IPL Auction ) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே அணி இதுவரை 3 வீரர்களை வாங்கியுள்ளது. முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வரும் அகீல் ஹொசைன் வாங்கப்பட்டுள்ளார். அகீல் ஹொசைன் நீண்ட மாதங்களாகவே சிஎஸ்கே அணியின் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டு வரும் பெயர்தான்.

குறிப்பாக அனலிஸ்ட் பிரசன்னாவின் முதல் கணிப்பாக இது இருந்தது. நிச்சயமாக ஜடேஜாவின் இடத்தில் அகீல் ஹொசைன் விளையாட வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்தார். ஏற்கனவே எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்காகவும், எம்எல்சி லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். பயிற்சியாளர் ஃபிளமிங்கின் கண்காணிப்பில் ஆடியவர்.
அதேபோல் என்ன பிட்சில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்ற நுணுக்கத்துடன் செயல்படும் திறன் அகீல் ஹொசைனுக்கு அதிகமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் தோனி, ஹர்திக் பாண்டியாவை போல் ஸ்ட்ரீட் ஸ்மார்ட் வீரர். கீழ்வரிசை பேட்டிங்கில் அதிரடியாக விளையாட கூடிய வீரர் என்பதால், அகீல் ஹொசைனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி இருந்தாலும், முழுமையாக திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சிஎஸ்கே அணி அகீல் ஹொசைனின் திறமையை பயன்படுத்திக் கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடும் வீரர்கள் சிஎஸ்கே அணியில் பட்டையை கிளப்புவார்கள். இதனால் அகீல் ஹொசைன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications