Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக கோப்பை கிரிக்கெட் பைனல்: அகமதாபாத்தில் பிரதமர் மோடி, முதல்வர்கள், வெளிநாட்டு ’தலை’கள் முற்றுகை!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியை காண மாநிலங்களின் பிரதமர் மோடி, முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அகமதாபாத்தில் மொத்தம் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதனையொட்டி அகமதாபாத் நகரே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

Gujarat: Ahmedabad gears up for World Cup Cricket final match

பிரமுகர்கள் படையெடுப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் அமைச்சர்கள், அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் அகமதாபாத்தில் குவிந்துள்ளனர்.

6,000 போலீசார் பாதுகாப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதபாத் மைதானத்தில் 1.25 லட்சம் ரசிகர்கள் அமர முடியும். கிரிக்கெட் ரசிகர்களை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு பணியிலும் சுமார் 6,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான படை சாகசம்: மேலும் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இன்று பகல் 12 மணிக்கு இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்திய விமானப் படையின் சூர்ய கிரண் குழுவின் 9 விமானங்கள் அகமதாபாத் மைதானத்துக்கு மேல் 10 நிமிடங்கள் வான்பரப்பில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய விமானப் படை சாகசம் முதல் முறையாக நடைபெற உள்ளது.

500 நடன கலைஞர்கள்: மேலும் முதல் இன்னிங்ஸ் முடிவடையும் போது உலகக் கோப்பை கிரிக்கெட் முன்னாள் சாம்பியன்கள் சிறப்பிக்கப்படுவர். 15 நிமிடம் இந்த நிகழ்வு நடைபெறும். மேலும் இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் 500 நடன கலைஞர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

1200 டிரோன்கள்: 2-வது இன்னிங்ஸில் 2-வது குடிநீர் இடைவேளையின் போது 90 நிமிடங்களுக்கு லேசர் ஷோ நிகழ்ச்சி நடத்தப்படும். இறுதிப் போட்டியின் கடைசி பந்து வீசும் போது, வெற்றி பெறும் அணி கோப்பையை பெறும் போது வானில் 1,200 டிரோன்கள் பறந்து வண்ண விளக்குகளை பாய்ச்சும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் ரசிகர்களை வரவேற்க கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+