ஹர்திக் பாண்டியா குடும்பத்தில் பிளவு.. சகோதரர் க்ருணாலுடன் மோதல்! பிரச்சனைக்கு மஹிகா சர்மாவே காரணம்
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மா உடனான உறவே இவர்களின் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு ஹர்திக்கை வாழ்த்தி ஒரு பதிவை கூட க்ருணால் பாண்டியா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின் அகமதாபாத் மைதானத்தில் தனது புதிய காதலியான மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா உற்சாகமாக கொண்டாடினார். ஒரு கட்டத்தில் கொண்டாட்ட அரங்கிலேயே மஹிகா சர்மாவுடன் படுத்து ரொமான்ஸ் செய்தார்.

அதேபோல் மைதானத்திலேயே மஹிகா சர்மாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். இது ஒரு சர்ச்சையாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில், ஹர்திக் பாண்டியாவின் குடும்பத்திலும் பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியாவுக்கும், அவரது அண்ணனான க்ருணால் பாண்டியாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மஹிகா சர்மா முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் இதற்கு முன் ஹர்திக் பாண்டியா எந்தவொரு வெற்றியை பெற்றாலும், அவரின் சகோதரரான க்ருணால் பாண்டியாவிடம் இருந்துதான் முதலில் வரும். அதேபோல் எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் ஹர்திக் பாண்டியா நேராக தனது சகோதரர் க்ருணால் பாண்டியா மற்றும் அவரின் மனைவி பன்கூரி ஆகியோருடனும், அவர்களின் குழந்தைகளுடன் தான் கொண்டாடுவார்.
ஆனால் கடந்த 6 மாதங்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா இடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. இதற்கு மஹிகா சர்மா உடனான உறவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா உடன் விவாகரத்து நடந்திருந்தாலும் நடாஷா ஸ்டான்கோவிக் உடனும், மகன் அகஸ்தியா உடனும் க்ருணால் பாண்டியாவின் குடும்பத்தினர் நட்புடன் இருக்கின்றனர்.
இத்தனைக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற போதும் கூட ஹர்திக் பாண்டியா ஒரு வாழ்த்து பதிவை கூட ஹர்திக் பாண்டியாவுக்காக வெளியிடவில்லை. அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் பதிவுகளை க்ருணால் பாண்டியாவும், க்ருணால் பாண்டியாவின் பதிவுகளை ஹர்திக்கும் லைக் செய்வதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. க்ருணால் பாண்டியா வசித்து வரும் அகமதாபாத் மண்ணில் தான் இறுதிப் போட்டி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications