அபிஷேக் சர்மா அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் அல்ல.. அவுட் செய்ய இதுதான் டெக்னிக்.. சொல்லி கொடுத்த ஆமிர்!
கொழும்பு: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற நுட்பத்தை பாகிஸ்தான் பவுலர்களுக்கு முன்னாள் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார். அபிஷேக் சர்மாவிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இல்லை என்று கூறிய அவர், டீப் கவரில் ஃபீல்டரை நிறுத்தி உடலை நோக்கி பவுலிங் செய்தால் தடுமாறுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. இந்தப் போட்டி நிச்சசயமாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்ற போது, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் கோப்பையை கூட வழங்கவில்லை.

இந்த ஆட்டத்திற்கு பின் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து அபிஷேக் சர்மா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்னும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அபிஷேக் சர்மாவை குறி வைத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமிர் விமர்சித்துள்ளார். முகமது ஆமிர் பேசுகையில், அபிஷேக் சர்மா ஒரு ஸ்லாக்கர்.. அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் கிடையாது. அவரிடம் நல்ல பேட்டிங் டெக்னிக்கும் இல்லை.. அத்தனை பந்துகளையும் சிக்ஸ் அடிக்க முயற்சிப்பார்.
8 இன்னிங்ஸ்களில் ஆடினால், ஒரு போட்டியில் மட்டுமே ரன்களை குவிப்பார். அதிரடியாக மட்டுமே விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கில் ஆபத்து அதிகம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை டீப் கவரில் ஃபீல்டரை நிறுத்தி, அவரின் உடல் நோக்கி பந்துவீசலாம். அதேபோல் கொஞ்சம் வேகம் குறைந்த பந்துகளுக்கும் தடுமாறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அபிஷேக் சர்மா நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். உச்சக்கட்ட ஃபார்மில் இல்லையென்றாலும், எந்த நேரத்தில் விளாசி தள்ளுவார் என்பதை கணிக்கவே முடியாது. அதேபோல் எவ்வளவு பெரிய மைதானம் என்றாலும், எளிதாக சிக்சர்களை விளாசக் கூடிய வீரராக இருக்கிறார். இதனால் அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே குறி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications