Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Pakistan: இந்தியா - பாகிஸ்தான்.. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா? கவாஸ்கர் சொல்வது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: (இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் India Pakistan Match): 17-வது ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இவ்விவகாரத்தில் அரசின் முடிவையே இந்திய அணியும் பிசிசிஐயும் பின்பற்றும் என்று கூறியிருக்கிறார்.

கிரிக்கெட் உலகின் பரம வைரிகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2012 டிசம்பர் - 2013 ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. அதற்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது இல்லை. எனினும், ஐசிசி நடத்தும் போட்டிகளிலும் பன்னாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் மோதிக்கொள்கின்றன.

government-will-take-the-final-call-on-india-pakistan-asia-cup-clash-sunil-gavaskar

இந்தியா பாகிஸ்தான் போட்டி

அந்தவகையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா துண்டித்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சிவசேனா, ஆம் ஆத்மி கட்சிகள் எதிர்ப்பு

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கூடாது என்று உத்தவ் சிவசேனா, டெல்லி ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போட்டியை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இந்த விவகாரத்தில், இந்திய அணி பிசிசிஐ மற்றும் இந்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற மட்டுமே செய்கிறது என்றும், போட்டி நடக்குமா என்பதில் முடிவு செய்வதில் எந்த பங்கும் அணிக்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு தான் முடிவு எடுக்கும்

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- "கடைசியில் அரசு தான் இதில் முடிவு எடுக்கும். அரசு என்ன முடிவு செய்கிறதோ அதை பிசிசிஐயும், வீரர்களும் பின்பற்றுவார்கள். இதுதான் நடக்கப்போகிறது. நாம் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில், அரசின் முடிவுதான். இந்த விவகாரத்தில் அதுதான் நடக்கப்போகிறது." என்றார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 17-வது ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த முறை 'ஏ' பிரிவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுத்து வரும் நிலையில் தான், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+