கருண் நாயர் இடத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு? இறுதியாக ஒரு முடிவை எடுத்த கம்பீர்.. சம்பவம் உறுதி!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்க உள்ளது. இதில் நம்பர் 3ல் களமிறங்கி வரும் கருண் நாயர் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் மோதுகின்றனர்.

லார்ட்ஸ் மைதான வரலாறு
கடைசியாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 பயணங்களில் 3 முறை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் வென்றுள்ளது. அதில் கடந்த முறை 60 ஓவர்களில் நரகத்தை காட்ட வேண்டும் என்று விராட் கோலி செய்த சம்பவத்தை எந்தவொரு இங்கிலாந்து ரசிகராலும் மறக்கவே முடியாது. இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.
பும்ரா ஆடுவது உறுதி
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா கம்பேக் கொடுக்க உள்ளார். இதனால் இந்திய அணியில் எத்தனை மாற்றங்கள் இருக்கும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக நிச்சயம் பும்ரா கொண்டு வரப்படுவார்.
வாஷிங்டன் சுந்தர் நீக்கம்?
லார்ட்ஸ் மைதானத்தை பொறுத்தவரை 2 ஸ்பின்னர்களின் தேவை இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஜடேஜாவை வைத்துக் கொண்டு வாஷிங்டன் சுந்தரை கம்பீர் கழற்றிவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தொடக்க வீரர்கள் மற்றும் நம்பர் 4ல் களமிறங்கும் சுப்மன் கில்லின் அபார ஆட்டம் காரணமாக நம்பர் 3ல் வரும் கருண் நாயர் கடந்த போட்டியில் தப்பித்துவிட்டார்.
77 ரன்கள்
"டியர் கிரிக்கெட் ப்ளீஸ் இன்னொரு வாய்ப்பு கொடு" என்று எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு, 8 ஆண்டு இடைவெளிக்கு பின் கருண் நாயர் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் ஆடிய 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 77 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் 2 நல்ல இன்னிங்ஸை ஆடிய பின், கருண் நாயரின் ஃபார்ம் மோசமாகவே இருந்தது.
கருண் நாயருக்கு வாய்ப்பு?
இதனால் கருண் நாயரின் இடத்திற்கு சாய் சுதர்சன் கொண்டு வரப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் அவ்வளவு எளிதாக வெற்றிக் கூட்டணியை மாற்ற மாட்டார். இதனால் 3வது போட்டியில் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டியிலும் சொதப்பினால், இதுவே அவருக்கான கடைசி வாய்ப்பாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications