கருண் நாயர் இடத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு? இறுதியாக ஒரு முடிவை எடுத்த கம்பீர்.. சம்பவம் உறுதி!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்க உள்ளது. இதில் நம்பர் 3ல் களமிறங்கி வரும் கருண் நாயர் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் மோதுகின்றனர்.

லார்ட்ஸ் மைதான வரலாறு
கடைசியாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 பயணங்களில் 3 முறை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் வென்றுள்ளது. அதில் கடந்த முறை 60 ஓவர்களில் நரகத்தை காட்ட வேண்டும் என்று விராட் கோலி செய்த சம்பவத்தை எந்தவொரு இங்கிலாந்து ரசிகராலும் மறக்கவே முடியாது. இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.
பும்ரா ஆடுவது உறுதி
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா கம்பேக் கொடுக்க உள்ளார். இதனால் இந்திய அணியில் எத்தனை மாற்றங்கள் இருக்கும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக நிச்சயம் பும்ரா கொண்டு வரப்படுவார்.
வாஷிங்டன் சுந்தர் நீக்கம்?
லார்ட்ஸ் மைதானத்தை பொறுத்தவரை 2 ஸ்பின்னர்களின் தேவை இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஜடேஜாவை வைத்துக் கொண்டு வாஷிங்டன் சுந்தரை கம்பீர் கழற்றிவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தொடக்க வீரர்கள் மற்றும் நம்பர் 4ல் களமிறங்கும் சுப்மன் கில்லின் அபார ஆட்டம் காரணமாக நம்பர் 3ல் வரும் கருண் நாயர் கடந்த போட்டியில் தப்பித்துவிட்டார்.
77 ரன்கள்
"டியர் கிரிக்கெட் ப்ளீஸ் இன்னொரு வாய்ப்பு கொடு" என்று எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு, 8 ஆண்டு இடைவெளிக்கு பின் கருண் நாயர் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் ஆடிய 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 77 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் 2 நல்ல இன்னிங்ஸை ஆடிய பின், கருண் நாயரின் ஃபார்ம் மோசமாகவே இருந்தது.
கருண் நாயருக்கு வாய்ப்பு?
இதனால் கருண் நாயரின் இடத்திற்கு சாய் சுதர்சன் கொண்டு வரப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் அவ்வளவு எளிதாக வெற்றிக் கூட்டணியை மாற்ற மாட்டார். இதனால் 3வது போட்டியில் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டியிலும் சொதப்பினால், இதுவே அவருக்கான கடைசி வாய்ப்பாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications