CSK vs RCB: நம்ம மட்டுமல்ல.. பங்காளி மும்பையும் பலவீனமா தான் இருக்கு.. காரணமே அதுதான்!
மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணியின் ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இருந்தாலும் சக பங்காளிகளான மும்பை அணியும் பலவீனமாக இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுடையே ஆறுதல்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று 3 துறைகளும் மோசமாக இருந்தன. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். அதேபோல் சிஎஸ்கே அணிக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயமாக மும்பை அணியும் பலவீனமாக இருக்கிறது.

மும்பை அணியை ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த அணியின் பும்ராவை சுற்றி பவுலிங் வரிசை கட்டமைக்கப்பட்டது. ஆனால் பும்ராவே காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதுவரை என்சிஏவில் மருத்துவ சிகிச்சையை மட்டுமே பும்ரா எடுத்து வருகிறார். இன்னும் பவுலிங் பயிற்சியையே தொடங்கவில்லை.
இதனால் ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் பும்ரா மும்பை அணிக்காக விளையாடுவது சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் போல்ட் மற்றும் தீபக் சஹர் ஆகியோரை சுற்றியே பவுலிங் செய்ய வேண்டிய நிலைக்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே டெத் ஓவர்களில் மோசமாக செயல்படக் கூடியவர்கள் என்பதால், ஹர்திக் பாண்டியாவே பந்தை கையில் எடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் எதிரணிகளால் விளாசப்பட்டிருக்கிறார். இதனால் மும்பை அணி டெத் ஓவர்களில் பவுலிங் செய்வதற்கு வீரர்கள் இல்லாமல் திணறி வருகிறது. அதேபோல் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
வழக்கமாக ஆர்சிபி அணியின் நிலையை கண்டு சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருவார்கள். ஆனால் இம்முறை தலைகீழாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணியை நினைத்து ஆர்சிபி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் இந்த ஐபிஎல் தொடர் கூடுதல் சுவாரஸ்யமாகி இருக்கிறது.
-
தல சேப்பாக்கத்தில் நடந்தால்.. அங்க ஈசிஆர் அதிரும்.. தோனியிடம் சிவகார்த்திகேயன் கேட்ட அந்த கேள்வி! -
ருதுராஜ் பந்தை இப்படி விளாசிட்டாரே.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டுட்டு வாங்க ஹசி.. தோனி கொடுத்த ரியாக்சன்! -
சிஎஸ்கேவை பாலோ செய்யும் காவ்யா மாறன்.. இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதை கவனிச்சீங்களா! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications