வைபவ் சூர்யவன்ஷியை இப்படி விமர்சிக்கலாமா.. தரக்குறைவாக பேசிய ஆர்சிபி வீரர்! இதெல்லாம் ஒரு பிரச்சனையா
மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஜித்தேஷ் சர்மா 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை தரக்குறைவாக பேசி விமர்சித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட்டருக்கான ஒழுங்குடன் நடக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜித்தேஷ் சர்மா, இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை சாடியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இம்முறை ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் தலைமையில் களமிறங்க உள்ளது. இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மீதுதான் ரசிகர்களின் கண்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டிலேயே மிகப்பெரிய சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இன்னும் மெருகேறி இருக்கிறார்.

இதனிடையே இந்திய ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிய போது, அவரின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது ஜித்தேஷ் சர்மா அவுட்டாகி இந்திய அணியை தோல்வி அடைய வைத்தார். அப்போது ஓய்வறையில் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி சரமாரியாக ஜித்தேஷ் சர்மாவை திட்டினார்.
இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஜித்தேஷ் சர்மா பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட் வீரராக வளரவில்லை. அவர் இன்னும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அவரை சுற்றி இருப்பவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் குணங்கள் அவ்வளவு எளிதாக மாறாது என்றே நினைக்கிறேன்.
களத்தில் இருக்கும் போது வைபவ் சூர்யவன்ஷி ஒழுக்கத்துடன் இருக்கிறார். அதனை பற்றி நான் பேசப் போவதில்லை.. ஆனால் இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கொஞ்சமாக ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்பதை உணர்வார்.
ஆனால் 15 வயது சிறுவனாக இருக்கும் போதே வைபவ் சூர்யவன்ஷியிடம் சீனியர் வீரர்களுக்கு நிகரான ஃபிட்னஸ் மற்றும் டயட் கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஜித்தேஷ் சர்மாவின் விமர்சனத்தை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அவர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications