வைபவ் சூர்யவன்ஷியை இப்படி விமர்சிக்கலாமா.. தரக்குறைவாக பேசிய ஆர்சிபி வீரர்! இதெல்லாம் ஒரு பிரச்சனையா
மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஜித்தேஷ் சர்மா 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை தரக்குறைவாக பேசி விமர்சித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட்டருக்கான ஒழுங்குடன் நடக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜித்தேஷ் சர்மா, இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை சாடியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இம்முறை ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் தலைமையில் களமிறங்க உள்ளது. இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மீதுதான் ரசிகர்களின் கண்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டிலேயே மிகப்பெரிய சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இன்னும் மெருகேறி இருக்கிறார்.

இதனிடையே இந்திய ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிய போது, அவரின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது ஜித்தேஷ் சர்மா அவுட்டாகி இந்திய அணியை தோல்வி அடைய வைத்தார். அப்போது ஓய்வறையில் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி சரமாரியாக ஜித்தேஷ் சர்மாவை திட்டினார்.
இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஜித்தேஷ் சர்மா பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட் வீரராக வளரவில்லை. அவர் இன்னும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அவரை சுற்றி இருப்பவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் குணங்கள் அவ்வளவு எளிதாக மாறாது என்றே நினைக்கிறேன்.
களத்தில் இருக்கும் போது வைபவ் சூர்யவன்ஷி ஒழுக்கத்துடன் இருக்கிறார். அதனை பற்றி நான் பேசப் போவதில்லை.. ஆனால் இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கொஞ்சமாக ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்பதை உணர்வார்.
ஆனால் 15 வயது சிறுவனாக இருக்கும் போதே வைபவ் சூர்யவன்ஷியிடம் சீனியர் வீரர்களுக்கு நிகரான ஃபிட்னஸ் மற்றும் டயட் கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஜித்தேஷ் சர்மாவின் விமர்சனத்தை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அவர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications