கிரீஸிற்கு வரும் முன்பே எதிரணிகளுக்கு நடுக்கம்.. சூர்யவன்ஷி கொடுத்த தாக்கம் இது.. சச்சின் நெகிழ்ச்சி
மும்பை: சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது அதிரடியால் திரும்பிப் பார்க்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷி அடித்த ரன்களை விட, அவர் எதிரணிகளுக்குள் ஏற்படுத்திய தாக்கம் தான் மிக முக்கியமானது" என்று புகழ்ந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 15 வயதே ஆன அன்-கேப்டு வீரர் ஆவார்.

"வைபவ் சூர்யவன்ஷி எடுத்த ரன்களையும் தாண்டி போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் பேட்டிங் செய்ய கிரீஸிற்கு வருவதற்கு முன்பே, எதிரணிகள் அவரை எப்படி அவுட் ஆக்குவது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டன. அணிகள் அவருக்காகத் தனி வியூகங்களை வகுத்தன" என்று சச்சின் கூறியுள்ளார்.
லீக் போட்டிகள் மட்டுமின்றி பிரஷர் அதிகமாக இருக்கும் எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் போன்ற பிளே-ஆஃப் போட்டிகளிலும் சூர்யவன்ஷி அதே அதிரடி வேகத்துடன் ஆடிய விதம் சச்சினை மிகவும் கவர்ந்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றதோடு, ஒற்றை ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் வரலாற்றுச் சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார்.
சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையையே மாற்றியதாக சச்சின் நம்புகிறார். "அவர் களத்திற்குள் நடந்து வரும் ஒவ்வொரு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள்ளே ஒரு புதிய உத்வேகமும், நம்மால் வெல்ல முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையும் பிறந்தது" என்று சச்சின் டெண்டுல்கர் தனது பதிவை நெகிழ்ச்சியுடன் முடித்துள்ளார்.
இளம் வீரர்களை ஆரம்பத்திலேயே அதிக பிரஷருக்குள் தள்ளக் கூடாது என்றும், சூர்யவன்ஷி தனது இயல்பான ஆட்டத்தை விளையாட கிரிக்கெட் உலகம் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் சச்சின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் விரைவில் இந்திய அணிக்குள் வைபவ் சூர்யவன்ஷி கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications