Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7வது முறை.. கொஞ்சம் கூட திருந்தாத அபிஷேக் சர்மா.. அவசியமில்லாத ஷாட் ஆடி மீண்டும் ஸ்பின்னரிடம் அவுட்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் விக்கெட்டை கொடுத்துள்ளார். வில் ஜாக்ஸ் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய போதும், தேவையில்லாமல் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறி கொடுத்திருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இங்கிலாந்து அணிக்காக முதல் ஓவரை ஆர்ச்சர் வீசினார்.

T20 World Cup 2026

ஆர்ச்சருக்கு எதிராக 5 போட்டிகளில் ஆடியுள்ள சஞ்சு சாம்சன், 3 முறை விக்கெட்டை கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால் சஞ்சு சாம்சன் நிதானமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அசத்தினார். தொடர்ந்து அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னரான வில் ஜாக்ஸ் அட்டாக்கில் வந்தார்.

அந்த ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா பவுண்டரி அடிக்க, அடுத்த 3 பந்துகளில் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை. இருந்தாலும் 5வது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடிக்க ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இதன்பின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மறுமுனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தேவையில்லாமல் சிக்ஸ் அடிக்க முயற்சித்து டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார்.

அங்கு தயாராக நின்றிருந்த பில் சால்ட் அந்த கேட்சை எளிதாக பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி இருக்கிறார். இதுவரை 19 இன்னிங்ஸில் ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொண்டுள்ள அபிஷேக் சர்மா 7வது முறையாக ஆஃப் ஸ்பின்னரிடம் விக்கெட்டாகி இருக்கிறார்.

இதனால் இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அபிஷேக் சர்மா ஸ்வீப் ஷாட்டை விளையாட முயற்சிக்கும் வரை இதே பாணியில் எதிரணிகள் அட்டாக் செய்வார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதனால் அபிஷேக் சர்மாவை இந்திய அணி சுயபரிசோதனை செய்ய வெளியில் அமர வைக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+