அபிஷேக் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையே காலி.. வீக்னஸை பிடித்துவிட்டார்கள்.. சீண்டும் முகமது ஆமீர்!
மும்பை: ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு வீரருக்கு எதிராக ஒரு திட்டத்தை எதிரணிகள் வைத்திருப்பார்கள் என்றும், அபிஷேக் சர்மாவின் வீக்னஸை ஒவ்வொரு அணியும் கண்டுபிடித்துவிட்டது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் அபிஷேக் சர்மா 7 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் அபிஷேக் சர்மா விக்கெட்டை பறிகொடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. எளிதாக டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி அவரை டீஸ் செய்யும் வகையில் பவுலிங் செய்தாலே எளிதாக விக்கெட்டை பறி கொடுத்துவிடுகிறார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களும் அவரின் ஸ்டம்ப் லைனில் அல்லது உடலை நோக்கி பவுலிங் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் பேசுகையில், இருதரப்பு தொடர்களுக்கும், ஐசிசி தொடர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இருதரப்பு தொடர்களில் பெரிதாக எந்த அணிகளும் ஒரு வீரருக்கு எதிராக திட்டமிட மாட்டார்கள். அப்படியான தொடர்களில் புதிய வீரர்களை உருவாக்கவும், சிலரை ஃபார்முக்கு கொண்டு வரவும் பயன்படுத்தி கொள்வார்கள்.
ஒரு வீரரை கட்டம் கட்டி அட்டாக் செய்ய மாட்டார்கள். ஆனால் ஐசிசி தொடர்கள் அப்படியல்ல.. ஒவ்வொரு வீரரின் வீக்னஸையும் எதிரணிகள் கண்டுபிடித்து திட்டங்களை அரங்கேற்றுவார்கள். அபிஷேக் சர்மாவின் வீக்னஸ் இப்போது வெளிப்பட்டுவிட்டது. இப்போது ஆஃப் ஸ்பின்னர்களிடம் அபிஷேக் சர்மா மாட்டிக் கொண்டுள்ளார்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களும் நேராக அபிஷேக் சர்மாவின் உடலை தான் கட்டம் கட்டி வருகிறார்கள். உடலை நோக்கி வீசப்படும் பந்துகளுக்கு அபிஷேக் சர்மா திணறுவதை பார்க்க முடியும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாட முடியும் என்றால், டெக்னிக்கலாக மட்டுமல்லாமல் மனதளவிலும் பலமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications