அபிஷேக் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையே காலி.. வீக்னஸை பிடித்துவிட்டார்கள்.. சீண்டும் முகமது ஆமீர்!
மும்பை: ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு வீரருக்கு எதிராக ஒரு திட்டத்தை எதிரணிகள் வைத்திருப்பார்கள் என்றும், அபிஷேக் சர்மாவின் வீக்னஸை ஒவ்வொரு அணியும் கண்டுபிடித்துவிட்டது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் அபிஷேக் சர்மா 7 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் அபிஷேக் சர்மா விக்கெட்டை பறிகொடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. எளிதாக டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி அவரை டீஸ் செய்யும் வகையில் பவுலிங் செய்தாலே எளிதாக விக்கெட்டை பறி கொடுத்துவிடுகிறார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களும் அவரின் ஸ்டம்ப் லைனில் அல்லது உடலை நோக்கி பவுலிங் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் பேசுகையில், இருதரப்பு தொடர்களுக்கும், ஐசிசி தொடர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இருதரப்பு தொடர்களில் பெரிதாக எந்த அணிகளும் ஒரு வீரருக்கு எதிராக திட்டமிட மாட்டார்கள். அப்படியான தொடர்களில் புதிய வீரர்களை உருவாக்கவும், சிலரை ஃபார்முக்கு கொண்டு வரவும் பயன்படுத்தி கொள்வார்கள்.
ஒரு வீரரை கட்டம் கட்டி அட்டாக் செய்ய மாட்டார்கள். ஆனால் ஐசிசி தொடர்கள் அப்படியல்ல.. ஒவ்வொரு வீரரின் வீக்னஸையும் எதிரணிகள் கண்டுபிடித்து திட்டங்களை அரங்கேற்றுவார்கள். அபிஷேக் சர்மாவின் வீக்னஸ் இப்போது வெளிப்பட்டுவிட்டது. இப்போது ஆஃப் ஸ்பின்னர்களிடம் அபிஷேக் சர்மா மாட்டிக் கொண்டுள்ளார்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களும் நேராக அபிஷேக் சர்மாவின் உடலை தான் கட்டம் கட்டி வருகிறார்கள். உடலை நோக்கி வீசப்படும் பந்துகளுக்கு அபிஷேக் சர்மா திணறுவதை பார்க்க முடியும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாட முடியும் என்றால், டெக்னிக்கலாக மட்டுமல்லாமல் மனதளவிலும் பலமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications