பெஞ்சிலேயே இருங்க துணைக் கேப்டன்.. அக்சர் படேலுக்கு ஆப்பு.. பின்னணியில் கம்பீர் செய்த தரமான சம்பவம்
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் துணைக் கேப்டன் அக்சர் படேல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, மார்கோ யான்சன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் இந்திய அணியில் ஒரு மாற்றம் கூட செய்யப்படவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் மீண்டும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் துணைக் கேப்டன் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு அணியின் துணைக் கேப்டனையே பெஞ்ச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அக்சர் படேல் மிகவும் பாவம் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இத்தனைக்கும் அக்சர் படேல் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். நமீபியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலின் பந்துகள் மிகச்சிறப்பாக அமைந்தன.
அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் மைதானம் அக்சர் படேலின் சொந்த மைதானமாகும். மண்ணின் மைந்தரான அக்சர் படேலை பெஞ்சில் உட்கார வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் வரிசையே காரணம். ஏனென்றால் டி காக், ரிக்கல்டன், மில்லர் என்று முக்கியமான 3 பேட்ஸ்மேன்களும் இடதுகை பேட்ஸ்மேன்கள்.
இதனால் இவர்களை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரின் பங்கு மிகவும் அவசியம். மிடில் ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை சாய்த்தால், இந்திய அணிக்கு சேஸிங் எளிதாக அமையலாம். இதன் காரணமாகவே துணைக் கேப்டன் என்றும் பாராமல் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications