தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. சொந்த மண்ணில் இலங்கையை அலறவிட்ட ஜிம்பாப்வே அணி.. ராசாவின் வெறியாட்டம்!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருப்பது அந்த அணி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சிறப்பாக ஆடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 4 சிக்ஸ் உட்பட 45 ரன்களை குவித்தார்.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரையன் பென்னட் - மருமாணி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இவர்கள் இருவருமே பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இதனால் 6 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 55 ரன்களை குவித்தது. இதன்பின் இலங்கை அணியின் பவுலர்கள் கட்டுப்படுத்த தொடங்கினர். சிறப்பாக ஆடிய மருமாணி 34 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரியான் பர்ல் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.
ஆனால் ஷனகாவின் பவுலிங்கில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா வந்தார். அப்போது வரை ஆட்டம் இலங்கை அணியின் கைகளில் இருந்தது. ஆனால் சிக்கந்தர் ராசா கொஞ்சம் கூட அசராமல் 6, 6, 4 என்று விளாச, மீண்டும் தீக்சனா ஓவரில் 6, 4 என்று பறக்கவிட்டார். இதனால் ஜிம்பாப்வே அணி எளிதாக 150 ரன்களை கடந்தது.
இதனிடையே சிறப்பாக பென்னட் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் சிறப்பாக ஆடிய ராசா 26 பந்துகளில் 45 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த முசிகிவா 1 ரன்னிலும் வெளியேறினார். இறுதியாக கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, உடனடியாக சிக்ஸ் விளாசி ஜிம்பாப்வே அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலமாக இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தி மறக்க முடியாத தோல்வியை பரிசளித்துள்ளது. இதன் மூலமாக குரூப் பி பிரிவில் 3 வெற்றிகளுடன் ஜிம்பாப்வே 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்திய நிலையில், தற்போது இலங்கை அணியை அலறவிட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஜிம்பாப்வே அணியிடம் எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications