சாதனைலாம் ஒரு மேட்டரே இல்ல.. தோனிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடக்குது.. விராட் கோலி சோகம்!
வதோதரா: தற்போதைய சூழலில் சாதனைகள் படைப்பதை பற்றிய சிந்தனையே எனக்குள் இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். அதேபோல் நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் அதிகளவில் கோஷம் எழுப்புவதை இதற்கு முன் தோனிக்கு நடந்திருக்கிறது என்று கூறிய விராட் கோலி, அது அவுட்டாகி பெவிலியன் செல்லும் பேட்ஸ்மேனுக்கு சோகம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 301 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி 49 ஓவர்களில் எட்டி வென்றது. சிறப்பாக ஆடிய 93 ரன்களை விளாசிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் விராட் கோலி பேசுகையில், இந்த விருதை எத்தனையாவது முறையாக பெறுகிறேன் என்பது நினைவில் இல்லை. எப்போது நான் வெல்லும் கோப்பைகளை கூர்கயானில் உள்ள அம்மாவுக்கு அனுப்பிவிடுவேன். எனது வெற்றிக் கோப்பைகளை சேர்ப்பது அம்மாவுக்கு பிடிக்கும். என்னுடைய பயணத்தை திரும்பி பார்க்கும் போது, நிச்சயமாக ஒரு கனவு நனவானது என்றே சொல்ல வேண்டும்.
என்னுடைய திறமைகளை பற்றி நன்றாக அறிந்திருக்கிறேன். அதனால் இன்றைய இடத்தை அடைய வேண்டும் என்றால், கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும் தெரிந்தே வைத்திருந்தென். நான் கேட்டதை விடவும் அதிகமாக கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். எனது பயணத்தை நினைத்து எனக்கே பெருமையாக உள்ளது.
இப்போதெல்லாம் என்னுடைய சாதனைகளை பற்றிய சிந்தனையே இல்லை. முதல் பேட்டிங் ஆடி இருந்தால், நான் இன்னும் அதிரடியாக விளையாட முயற்சித்திருப்பேன். ஆனால் சேஸிங்கின் போது இலக்கு கண்களுக்கு தெரிந்துவிட்ட போது, சூழலுக்கு ஏற்ப விளையாடுவதே சரியான விஷயம். இன்னும் சில பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்று முயற்சித்தேன். என்னுடைய அணி எளிதாக வெல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
தற்போது ஆட்டத்தில் சூழல் கடினமாக இருந்தால், கவுன்டர் அட்டாக் செய்ய முயற்சிப்பேன். எந்த பந்தில் நம் விக்கெட் விழும் என்று தெரியாது. எந்த பந்தில் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. அதனால் டிஃபென்சிவ்வாக விளையாடி எந்த பிரயோஜனமும் இல்லை. அதேபோல் அட்டாக்கிங் ஆட்டம் என்று இஷ்டத்திற்கும் விளையாட கூடாது. ரோகித் சர்மா அவுட்டான போது, முதல் 20 பந்துகளில் அட்டாக் செய்தேன்.
நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் அதிகமாக கோஷம் எழுப்புகிறார்கள். அதனை அறிந்தே இருக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அது எனக்கு சோகம் அளிக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பாக தோனிக்கு அப்படி நிகழ்ந்தது. ஒரு வீரர் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது, ரசிகர்கள் எனக்காக கோஷம் எழுப்புவது சரியானதல்ல.
ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆட்டத்தில் நான் கவனம் வைக்க வேண்டும். மக்களை மகிழ்ச்சி அடைய வைப்பது எனக்கு தொழிலாக அமைந்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஆட்டத்தால் மக்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தே எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications