தான் சுமந்தவனுக்கு முன்.. தலைவணங்கிய "கிங்" கோலி.. "காட்" சச்சின் தந்த அந்த ரியாக்சன்.. நெகிழ்ச்சி
சென்னை; கிரிக்கெட் உலகில் அதிக ஒருநாள் சாதனை படைத்தவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சச்சினின் 49 ஒருநாள் சதம் என்ற சாதனையை கோலி முறித்து 50 சதம் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2011 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றதும்.. சச்சின் டெண்டுல்கரை இரண்டு பேர் தூக்கி சென்றனர். அதில் ஒருவர் ரெய்னா. இன்னொருவர் கோலி. சச்சின் 100வது சதம் அடிப்பார் ன்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்.. சச்சின் 100வது சதத்தை அன்று எட்டவில்லை என்றாலும் உலகக் கோப்பையோடு கோலி முதுகில் அமர்ந்து வான்கடே மைதானத்தை வலம் வந்தார்.
அதே வான்கடே மைதானத்தில்.. தன்னை சுமந்தவன் தனக்கே தலைவணங்கி.. தன் சாதனையையே முறையடிப்பான் என்று நினைத்திருக்க மாட்டார் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். ஆனால் அவரின் அதே சாதனையை அவரின் வான்கடே மைதானத்திலேயே முறியடித்து இருக்கிறார் கிங் கோலி.

கடந்த முறை வான்கடே மைதானத்தில் சதம் அடித்து இருந்தால் கோலி சச்சின் சாதனையை சமன் செய்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சச்சின் முன் அந்த சாதனையை செய்ய முடியாமல் கொல்கத்தா மைதானத்தில் கோலி சச்சின் சாதனையை சமன் செய்தார். அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.. சச்சின் சாதனையை அதே வான்கடே மைதானத்தில் இன்னும் 2 போட்டிகளில் முறியடிக்க போகிறார் என்று. அது இன்று நடந்துவிட்டது. சச்சினுக்கு முன்.. அவருக்கு தலைவணங்கி அவரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
( சச்சினை மட்டும் விமர்சிச்சாங்களே.. கோலியும்தான் செஞ்சுரிக்கு ஆடுறாரே? ஏன்? பின்னணியில் வேற காரணம்!)
இதற்கு சச்சின் நெகிழ்ச்சியாக முகம் முழுக்க சிரிப்போடு.. அன்போடு கொடுத்த ரியாக்சன் பலரும் கவர்ந்தது. நீதான் ஹீரோ என்பது போல முத்தங்களை வாரி பொழிந்து அனுஸ்கா சர்மாவும் அன்புகளை பொழிந்தார்.
சாதனை: இந்த சாதனையை படைத்தும்.. சச்சினுக்கு முன் மட்டும் தலைவணங்காமல்.. தனது மனைவியிடமும் அன்பை வெளிப்படுதும் விதமாக கோலி கைகாட்டினார். டேவிட் பெக்கம் தொடங்கி உலகின் பல பிரபலங்கள் மேடையில் அவர்களுக்கு முன்பாக கோலி இந்த இமாலய சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் தான் ஒரு கோட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோலி!
இந்த தொடரில் கோலியின் ரோல் மெதுவாக ஆடுவதுதான். அதற்கு ஏற்றபடி 100 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடினார். கோலியின் ரோல் மெதுவாக ஆடுவது. முக்கியமாக ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுவது. கடைசி வரை களத்தில் இருப்பது. எதிரில் விக்கெட் விழுந்தாலும்.. விக்கெட்டை இழக்காமல் ஆடுவது. ஒருவர் செஞ்சுரி அடித்தால் மொத்த அணியின் ஸ்கோர் கூடும்.. 230 அடிக்க வேண்டிய இடத்தில் எளிதாக 330 ரன்களை ஒரு செஞ்சுரி கொடுக்கும்.

இதனால்தான் அவர் மெதுவாக ஆட வேண்டும் என்று ரோல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக அணியில் கோலிக்கு கொடுக்கப்பட்டு ரோல் இதுதான். இந்திய அணியில் ஆங்கர் ரோல் சீனியர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கோலி. - ரோஹித் - கே எல் ராகுல் மூவரில் ஒருவர் கண்டிப்பாக ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக ரோஹித் வேகமாக தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார் என்றால் அதன்பின் கோலி மெதுவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்காமல் கடைசி வரை இருக்க வேண்டும்.
எதிரே விக்கெட் சென்றாலும் மெதுவாக ஆடி ரன் சேர்க்க வேண்டும். இந்திய அணியில் இந்த ஆங்கர் ரோல் இத்தனை காலம் மிஸ்ஸானது. அது மீண்டும் திரும்பி வந்துள்ளது. அதனால்தான் எதிரே விக்கெட் விழுந்தாலும் கோலி முடிந்த அளவு நிதானமாகவே ஆடி அணியின் ரன்னை உயர்த்தி வருகிறார். ரன் ரேட் பற்றி கவலைப்பட வேண்டாம்.. டீம் மொத்தமாக சரியாமல் பார்த்துகொள்ளங்கள் என்ற ரோல்தான் கோலிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதை உணர்ந்து கோலி மெதுவாக ஆடுவதோடு சதம் அடிப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications