Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோலி பேட்டிங் செய்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார்! எதுக்கு அப்படி செய்தார் தெரியுமா! பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது திடீரென ஒரு இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்து கோலி அருகே சென்ற நிலையில், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர். 2011க்கு பிறகு இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது.

 Who is the man entered in field while kohli batting in world cup finals

இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ரோஹித், கில் நன்றாகவே ஆடி வந்தனர். குறிப்பாக ரோஹித் வழக்கம் போல அடி வெளுத்து வாங்கினார்.

உள்ளே நுழைந்த இளைஞர்: அப்போது கோலி ஆடிக் கொண்டிருந்த போது, திடீரென பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் அணிந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்திற்குள் நுழைந்த அந்த இளைஞர் நேரடியாக விராட் கோலியிடம் சென்றார். பின்னர், அவரை பிடித்த காவலர்கள் மைதானத்தில் இருந்து அவரை அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து போட்டி வழக்கம் போலத் தொடங்கியது.

இதற்கிடையே விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில்தான் அவர் தனது பெயர், எந்த நாட்டை சேர்ந்தவன் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

யார் அவர்: 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவான டி-ஷர்ட் அணிந்து அந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்திருந்தார். இதற்கிடையே அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த இறுதிப் போட்டியில் கோலியை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்த நபர் ஓடிச் சென்று கோலியைக் கட்டியணைத்தார். அதற்குள் அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.

இதற்கிடையே அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர் தனது பெயர் ஜான் என்றும் விராட் கோலியைச் சந்திக்கவே களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் ஏன் அணிந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, தான் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.

என்ன காரணம்: அந்த வீடியோவில் அந்த நபர், "எனது பெயர் ஜான். நான் நான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவன். எனக்கு விராட் கோலியை ரொம்ப பிடிக்கும். அவரை பார்க்கவே நான் மைதானத்திற்குள் நுழைந்தேன்" என்றார். பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அந்த நபர், "பாலஸ்தீனத்தில் இப்போது போர் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறேன். இதன் காரணமாகவே பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் அணிந்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+