கோலி பேட்டிங் செய்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார்! எதுக்கு அப்படி செய்தார் தெரியுமா! பரபர வீடியோ
டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது திடீரென ஒரு இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்து கோலி அருகே சென்ற நிலையில், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர். 2011க்கு பிறகு இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ரோஹித், கில் நன்றாகவே ஆடி வந்தனர். குறிப்பாக ரோஹித் வழக்கம் போல அடி வெளுத்து வாங்கினார்.
உள்ளே நுழைந்த இளைஞர்: அப்போது கோலி ஆடிக் கொண்டிருந்த போது, திடீரென பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் அணிந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்திற்குள் நுழைந்த அந்த இளைஞர் நேரடியாக விராட் கோலியிடம் சென்றார். பின்னர், அவரை பிடித்த காவலர்கள் மைதானத்தில் இருந்து அவரை அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து போட்டி வழக்கம் போலத் தொடங்கியது.
இதற்கிடையே விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில்தான் அவர் தனது பெயர், எந்த நாட்டை சேர்ந்தவன் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
யார் அவர்: 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவான டி-ஷர்ட் அணிந்து அந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்திருந்தார். இதற்கிடையே அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த இறுதிப் போட்டியில் கோலியை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்த நபர் ஓடிச் சென்று கோலியைக் கட்டியணைத்தார். அதற்குள் அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதற்கிடையே அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர் தனது பெயர் ஜான் என்றும் விராட் கோலியைச் சந்திக்கவே களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் ஏன் அணிந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, தான் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.
என்ன காரணம்: அந்த வீடியோவில் அந்த நபர், "எனது பெயர் ஜான். நான் நான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவன். எனக்கு விராட் கோலியை ரொம்ப பிடிக்கும். அவரை பார்க்கவே நான் மைதானத்திற்குள் நுழைந்தேன்" என்றார். பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அந்த நபர், "பாலஸ்தீனத்தில் இப்போது போர் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறேன். இதன் காரணமாகவே பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் அணிந்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications