தாங்க முடியாத பிரஷர்! சீன வீரரின் அந்த ஒரு தவறு! சரியாக குகேஷ் செய்த மூவ்- வெற்றிக்கு காரணமே இதுதான்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்து வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்று குகேஷ் புதிய சரித்திரம் படைத்துள்ளார். இன்று நடந்த கடைசி போட்டி டிரா ஆகும் என்றே பலரும் நினைத்த நிலையில், கடைசி நேரத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் எதிரில் களமிறங்கிய டிங் லிரன் ஒரு சிறிய தவறு செய்தார். இதுவே குகேஷ் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ் களமிறங்கினார். அவருக்கு எதிராகச் சீனாவின் டிங் லிரன் போட்டியிட்டார்.

வெற்றி: மொத்தம் 14 சுற்றுகளில் போட்டி நடைபெறும் நிலையில், அதில் யார் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ.. அவர்களே வெற்றியாளராகக் கருதப்படுவார்கள். இதுவரை நடந்த 13 சுற்றுகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளனர். மற்ற போட்டிகள் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் இருக்கின்றனர்.
இதற்கிடையே இன்று 14வது சுற்றுப் போட்டி நடந்தது. இதில் சீனாவின் டிங் லிரன் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நிலையில், குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் போட்டியிட்டார். இந்த போட்டி டிராவில் முடியும் என்றே பலரும் நினைத்தனர். இதுவும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும். அதன் மூலமே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் என்றே பலரும் நினைத்தனர். விஸ்வநாதன் ஆனந்த் உட்பட பலரும் போட்டி டிராவில் முடியும் என்றே கூறியிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்தது.
அந்த ஒரு தவறு: கடைசிக் கட்டத்தை நெருங்க நெருங்க அழுத்தம் அதிகரித்தது. குகேஷும் தொடர்ந்து முயன்று வந்த நிலையில், 55ஆவது நகரில் அதீத அழுத்தம் காரணமாக டிங் லிரன் ஒரு மேஜர் தவறை செய்தார். அவரது ரூக், அதாவது யானை F4இல் இருந்த நிலையில், அதை F2க்கு நகர்த்தினார். இதுதான் அவர் செய்த ஒரே தவறு.
குகேஷ் அடுத்துச் செய்த மூவ்: இதைப் பட்டென பிடித்துக் கொண்ட குகேஷ் தனது அடுத்தடுத்து காய் நகர்த்தல்களில் டிங் லிரனுக்கு அழுத்தம் கொடுத்தார். பி2ல் இருந்த தனது யானைக் காய் மூலம் லிரனின் யானை காயைத் தூக்கினார். தொடர்ந்து ஜி1ல் இருந்த தனது ராஜா மூலம் குகேஷின் யானையை லிரன் வெட்டினார். அடுத்து குகேஷ் தனது பிஷப் (மந்திரி) காய் மூலம் செக் வைத்தார். அதில் இருந்து தப்ப லிரன் தனது பிஷப் காயை இழக்க வேண்டி இருந்தது.

கடைசியில் லிரனுக்கு ராஜாவும், ஒரு சிப்பாயும் இருந்தது. அதேநேரம் குகேஷுக்கு ராஜாவும், இரண்டு சிப்பாயும் இருந்தது. தொடர்ந்து ஓரிரு நகர்த்தல் மட்டும் இருந்த நிலையில், லிரன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்த போட்டியை உலகெங்கும் பலரும் பார்த்து வந்த நிலையில், அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் லிரன் தனது ரூக்கை தவறாக நகர்த்திவிட்டார். அந்த ஒரு நகர்த்தலையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி குகேஷ் சரித்திரம் படைத்தார்.
ஆனந்த் கண்ணீர்: வழக்கமாகப் போட்டியில் வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாகும் குகேஷ் எமேஷ்னல் ஆக மாட்டார். ஆனால், இந்த முறை குகேஷால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வென்றதும் ஆனந்த் கண்ணீர் விட்டார். இந்த வெற்றியின் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications