இதுக்கு முடிவே கிடையாதா?.. ஒரே மாதத்தில் 2-வது முறை.. தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை அத்துமீறல்
தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தும், படகுகளை, வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வலிறுத்தியதன்பேரில் மத்திய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்தும் இலங்கை ராணுவத்தினர் திருந்துவதாக தெரியவில்லை. அவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறை
அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். நமது மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டிய அவர்கள் 10க்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளின் வலைகளை வெட்டி எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் அராஜகம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நடந்துள்ளது.

கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினார்கள்
கடந்த 10-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி விரட்டியடித்தனர். இந்த கோர தாக்குதலால் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்தன. இதேபோல் கடந்த மாதம் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இதற்கு முடிவே கிடையாதா?
மீனவர்கள் உடல் முழுவதும் சானிடைசர் தெளித்து மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டனர் இலங்கை கடற்படையினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கோரிக்கை விடுத்தனர். மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. சில நாட்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விடுத்தது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications