For Daily Alerts
Just In
ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறவே முடியாது: ராஜபக்சே திட்டவட்டம்!
கொழும்பு: ஈழத் தமிழர் வாழும் இலங்கையின் வடபகுதியில் இருந்து ராணுவ முகாம்களை அகற்றவே முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜபக்சே கூறியுள்ளதாவது:
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் நாடு முழுவதும் ராணுவம் முகாம்களை அமைத்து நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றது.
தமிழர்கள் வாழும் வடபகுதியில் மட்டுமல்ல சிங்களவர் வாழும் அம்பாந்தோட்டையிலும் ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இலங்கை அரசு எக்காரணம் கொண்டும் வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களை மூடிவிட தயாராக இல்லை.
அதே நேரத்தில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை படிப்படியாக பாதுகாப்புத் தேவைக்கு ஏற்றபடி குறைக்கப்படும்.
இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.
Comments
English summary
Sri lanka President Mahinda Rajapaksa said that there will be no withdrawal of the army from the north has raised concerns about the Sri Lankan government’s intention as regards its demilitarisation.
Story first published: Friday, April 25, 2014, 9:45 [IST]