பெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்!
யாழ்ப்பாணம்: தென்னாசியாவின் அறிவு களஞ்சியமான யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்கள காடையர்கள் இனவெறியால் எரித்த 39-வது ஆண்டு துயரநாள் இன்று.
தெற்காசியாவிலேயே ஆகச் சிறந்த நூலகமாக சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் என நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம்தான் யாழ்ப்பாணம் நூலகம். தென்னாசியாவின் அறிவு களஞ்சியமாக திகழ்ந்தது அது.

1933-ம் ஆண்டு மு. செல்லப்பாவால் தொடங்கப்பட்டு மெதுவாக உருவாக்கப்பட்டு தென்னாசியாவின் பிரமிக்கத்தக்க நூலகமாக வளர்ந்தது. 1959-ம் ஆண்டு நூலகமானது யாழ். மாநகர மேயர் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது.
இத்தகைய அறிவுப் பொக்கிஷத்தை 39 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள காடையர்கள் தீயிட்டு எரித்தனர். 20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவமும் மிக முக்கியமான ஒன்று.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட கொடூரத்தை நேரில் பார்த்த தாவீது அடிகளார் நெஞ்சுவலியால் துடிதுடித்து காலமானார். மொத்தம் 6,000 நூல்கள் எரிந்து போயின. 1672-ல் பிலிப்பஸ் பால்டியாரின் டச்சு ஆட்சியில் இலங்கை, 1660-ல் கண்டி மன்னர் சிறைவைத்த ராபர்ட் நோக்ஸ் எழுதிய இலங்கை பற்றிய நூல்களும் அழிந்தன.
1585-ல் கத்தோலிக்க மதத்தின் தலைவர் எழுதிய நூல் ஒன்றும் எரிந்தது. 2003-ல் மீள் திறப்பு உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த நூலக எரிப்பு. இச்சம்பவம் தொடர்பாக ஏராளமான படைப்புகள், ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
2003-ம் ஆண்டு இந்த நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்நூலகம் எரிப்பின் 39-வது ஆண்டு நினைவு நாள் உலகத் தமிழர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications