மைத்ரி யுகத்தை நோக்கிச் செல்வோம்... மைத்ரிபால சிறிசேன அழைப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: தனக்காக வாக்களித்த இலங்கை மக்களுக்கு நன்றி கூறியுள்ளார் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன.
ராஜபக்சவை வீழ்த்தி எதிர்பாராத வகையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் சிறிசேன. அவரது பெரும் வெற்றிக்கு தமிழர்களின் வாக்குகள் பெருமளவில் கிடைத்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

வெற்றியைத் தொடர்ந்து தனது இணையதளத்தில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள அவரது செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது...
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணையுடனான மைத்ரி யுகத்தை நோக்கி செல்வோம் என்று அதில் கூறியுள்ளார் சிறிசேன.












Click it and Unblock the Notifications