ராஜபக்சே தம்பி பசில் ராஜபக்சே ஜாமீனில் விடுதலை!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: நிலமோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜபக்சேவின் தம்பியான இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த ஆண்டு மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்ததால் அவரது தம்பி பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். ஆனால் அவர் மீது நிதி மோசடி புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேறுவழியின்றி அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார் பசில். அவர் இலங்கை திரும்பிய உடனேயே கைது செய்யப்பட்டார். 3 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாத்தறை பகுதியில் நில மோசடி தொடர்பாக பசில் ராஜபக்சே மீண்டும் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவரை ஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.












Click it and Unblock the Notifications