தப்பியோடிய ராஜபக்சேக்கள்.. துடிக்கும் சு.சாமி.. இந்தியாவிற்கு நல்லது இல்லை என எச்சரிக்கை
டெல்லி: இலங்கையைவிட்டு ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது அல்ல; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
Recommended Video
இலங்கையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, பதவியை விட்டு ஓடிய மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் சுப்பிரமணியன் சுவாமி. இலங்கையில் ராஜபக்சேக்களை அந்நாட்டு சிங்கள மக்களே ஓட ஓட விரட்டுவது கண்டு ரத்தக் கண்ணீர் வடிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜபக்சேக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவத்தையே பிரதமர் மோடி அனுப்ப வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தவர்

ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை தொடர்பாக கூறியதாவது: இலங்கையில் நடக்கும் போராட்டங்களுக்கு ஜேவிபி என்ற கட்சிக்கு தொடர்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வன்முறை இயக்கமாக இருந்தது ஜேவிபி. மக்கள் புரட்சி மூலம் இலங்கையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறது ஜேவிபி.
இலங்கை ராஜபக்சே சகோதரர்கள் அந்நாட்டு மக்களால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ராஜபக்சே சகோதரர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை. இலங்கை மக்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டவர்கள்தான் ராஜபக்சே சகோதரர்கள். அவர்களுக்கு எதிராக ஒரு குழுதான் போராட்டம் நடத்துகிறது. ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என கடும் நெருக்கடி தரப்பட்டது.
ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியது இந்தியாவுக்கு நல்லது அல்ல. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தானது. இலங்கை என்பது இந்தியாவின் எல்லையில் இருக்கும் நாடு. இலங்கையில் இந்திய எதிர்ப்பாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். சீனா, பாகிஸ்தானும் இலங்கையில் காலூன்றி நிற்கிறது. ஆகையால் இலங்கை விவகாரங்களை மிக சாதாரணமாக நமது நாடு எடுத்துக் கொள்ளவும் கூடாது.
இலங்கையில் நடைபெறும் பிரச்சனைகள் நாட்டின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். அண்டை நாடு என்ற போதும் நாம் உடனே ராணுவத்தை அனுப்பிவிட முடியாது. ஒருவேளை ராஜபக்சே சகோதரர்கள், ராணுவ உதவியைக் கேட்டிருந்தால் நமது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். அமைதியை இலங்கையில் நிலைநாட்ட இந்திய ராணுவம் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications