இலங்கையில் நேற்றும் முஸ்லிம்கள் மீது சிங்களர் தாக்குதல்!!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் 2வது நாளாக தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது வெலிப்பன்ன என்ற இடத்தில் சிங்கள கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய நகரங்களில் சிங்கள காடையர் கும்பலான பவுத்த பிக்குகள் கட்சியான 'பொதுபலசேனா'வினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் வெலிப்பன்ன என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சிங்களர்கள் திரண்டு, ஊரடங்கு உத்தரவை மீறி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
அப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications