சேனல் 4 தொலைக்காட்சி குழு தமிழர் பகுதிக்கு செல்ல 'எதிர்ப்பு நாடகம்'- கொழும்பு திரும்ப வைத்தனர்!!

Subscribe to Oneindia Tamil

அனுராதபுரம்: தமிழர்கள் வாழும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு சேனல் 4 தொலைக்காட்சி குழுவினரை செல்ல விடாமல் பாதியிலேயே கொழும்புக்கே திரும்ப வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காமன்வெல்த் நாடுகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்பட இயக்குநர் கலம் மக்கரே உள்ளிட்ட குழுவினருக்கு இலங்கை விசா வழங்கியது. சேனல் 4 குழுவினர் மகிந்த ராஜபக்சை பின் தொடர்ந்தே கேள்விக் கணைகளை துளைத்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழ் தேவி ரயில் மூலமாக சேனல் 4 குழுவினர் இன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது அனுராதபுரம் அருகே 10 பேர் கொண்ட சிங்கள கும்பல் ஒன்று அந்த ரயிலை மறித்தது.

"புலிகளின் குரலாக ஒலிக்காதே" என்ற பதாகைகளை ஏந்தியபடி அந்த சிங்களக் குழுவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். உடனே அங்கு இருந்த சிங்கள காவல்துறையினர் யாழ்ப்பாணம் போகிறவரை இதேபோல் போராட்டம் நடைபெறும்.. உங்களது பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறியதுடன் ரயிலில் இருந்து அவர்களை இறக்கி வாகனம் மூலம் கொழும்புக்கு கொண்டு வந்துவிட்டனர்.

தமிழர் வாழும் வடக்குப் பகுதியில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களை எங்கே சேனல் 4 குழுவினர் சேகரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இலங்கை அரசே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+