முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஈழப் போரின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

நினைவுச்சின்னம் இடிப்பு
இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தவர்கள், முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்து தள்ளியுள்ளனர்.

தமிழர்கள் போராட்டம்
இச்சம்பவம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்பு ஒன்றுகூடிய தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் கண்டனம்
முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், "ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கனவே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலையில் முள்ளி வாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருப்பதை, பிரதமர் மோடி கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!" என்று பதிவிட்டுள்ளார்

தலைவர்கள் கண்டனம்
முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்குத் உலக தமிழர்கள் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications