ஈழத்தில் சிங்கள ராணுவ தடையை உடைத்து மாவீரர் இல்லங்கள் சீரமைப்பு- நாளை மாவீரர் நாள்!
தமிழீழ மாவீரர் நாளையொட்டி ஈழத்தில் மாவீரர் இல்லங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்: ஈழத்தில் சிங்கள ராணுவத்தின் தடையை உடைத்து மாவீரர் துயிலும் இல்லங்களை பொதுமக்கள் சீரமைத்து வருகின்றனர்.
தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வு நாளை உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக கடைபிடிக்கப்பட இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இயங்கிய வரை நவம்பர் 27-ந் தேதி அதன் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றுவார்.

அதனைத் தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்க தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் நினைவிடங்களில் ஈகைச் சுடரேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை சிங்கள ராணுவம் இடித்து தரைமட்டமாக்கியது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் நாள் நிகழ்வுகள் மீண்டும் எழுச்சியுடன் ஈழத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் களைகட்டியிருக்கிறது. கனகராயன்குளம் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. சிங்கள ராணுவத்தின் தடையை மீறி மாவீரர் நாளை கடைபிடிக்க தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications