பயங்கரவாதி கே.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சொல்வது சரத் பொன்சேகா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்கிற கே.பி. ஒரு பயங்கரவாதி அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சரத் பொன்சேகா டிவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:
ரணில் பதவி பிரமாண நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சே எனது அருகிலேயே அமர்ந்திருந்தார். பல முறை என்னைப் பார்த்து பேச முயற்சித்தார். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன்.

ஒரு தடவை பாம்பு கொத்தியது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒருமுறை கைவிடுவது பிழை என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டேன்.
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என்கிறா சட்ட அமைச்சர். ஆனால் கே.பி. ஒரு பயங்கரவாதி... என அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக என எனக்குத் தோன்றவில்லை. பெரிய பீரங்கி அல்லது மோட்டார் குண்டு ஒன்றின் இரும்புப் பகுதி பட்டதால் அவரது மண்டை பிளவுபட்டிருக்க வேண்டும்.
2 பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம் அமைத்துள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதில் தவறில்லை.
போரின் போது சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டது என அமெரிக்கா கருதியதனால் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே, ராஜபக்சே அல்லது உயர் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பொன்சேகா கூறினார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications